வன்னியில் பாதுகாப்பு வலயம் மீது படையினர் கொலைவெறித் தாக்குதல்: இன்று (வியாழன்) 322 பொதுமக்கள் படுகொலை; 300க்கு மேல் காயம் |
|
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பிரதேச பாதுகாப்பு வலயப் பகுதியில் வாழும் மக்கள் மீது இன்று சிறிலங்கா படையினர் நடத்திய கனரக துப்பாக்கிச் சூடு மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் 322 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். |
பாதுகாப்பு வலய' பகுதிக்குள் ஊடுருவ முயற்சித்த சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலைத் தொடர்ந்து, பின்வாங்கிச் சென்ற சிறிலங்கா படையினர் இன்று வியாழக்கிழமை காலை 5:00 மணி தொடக்கம் மாலை 6:00 மணிவரை கனரக துப்பாக்கிச் சூடு மற்றும் எறிகணைத் தாக்குதல்களை மக்களை இலக்கு வைத்து அகோரமாக நடத்தினர். பாதுகாப்பு வலய' பகுதிக்குள் உள்ள அம்பலவன்பொக்கணை, இடைக்காடு மற்றும் மாத்தளன் பகுதிகளை நோக்கியே சிறிலங்கா படையினர் இத்தாக்குதல்களை நடத்தினர். அம்பலவன்பொக்கணை மற்றும் இடைக்காடு ஆகிய பகுதிகளில் மட்டும் 212 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதேவேளையில் பாதுகாப்பு வலயப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்துவதில்லை என அனைத்துலக ஊடகங்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் கூறியிருந்த நிலையில் மீண்டும் இப்பகுதியை நோக்கி அது தாக்குதலை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது |
ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com
Thursday, April 9, 2009
கொத்து கொத்தை வடியும் தமிழர் ரத்த்தங்களும் வீழும் உயிரகளும்
Subscribe to:
Post Comments (Atom)
Followers
News Archive
-
▼
09
(129)
-
▼
Apr
(13)
- பெரும் கொடுமை பேரவலம் - ஆயிரக்கணக்கில் தமிழ் உயிர்...
- கொடுமையிலும் கொடுமை சிங்கள அரக்கர்களின் அட்டகாசம் ...
- வைகோ சரண்டர் பின்னணி… வன்னியிலிருந்து வந்த கட்டளை!
- கபட வேடதாரி கருணாநிதி இங்கே இந்த ஈழ நண்பனின் மடலை ...
- வைகோ மீது வழக்கு பதிவு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக...
- கொத்து கொத்தை வடியும் தமிழர் ரத்த்தங்களும் வீழும் ...
- இலங்கை தமிழர் நலனுக்கு மத்திய அரசே பொறுப்பு : பா.ம...
- தமிழக மக்கள் சரியான முடிவுகளை எடுப்பார்கள். நடேசன்...
- மதிமுக தொண்டனின் கேள்வியும் பதிலும்
- இந்தா செய்திதான் வைகோவை எட்டாம் தேதி போராட்டம் செய...
- இந்தியா கொடுத்த நச்சுவாயு புதுக்குடியிருப்பு மோதல...
- ஈழ துரோகி கருணாநிதி அன்றும் இன்றும்.
- சோனியா போரை நிறுத்த கோரிக்கையாம்.
-
▼
Apr
(13)
About Me
- www.mdmkonline.com
- முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.