ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com

Tuesday, April 7, 2009

மதிமுக தொண்டனின் கேள்வியும் பதிலும்

மதிமுக தொண்டனின் கேள்வியும் பதிலும்

விடுதலைப்புலிகளின் தடையை நீக்க கோரி தமிழக மாணவர்கள் குழு ரெயிலில் நூதன போராட்டம் சென்னையில் நடத்தியது , நெல்லையில் காசி ஆனந்தன் துவக்கி வைத்தார் , சென்னையில் தலைவர் வைகோ அவர்கள் அவர்களை வரவேற்று பேசினார்கள்.

அப்பொழுது சில மாணவர்கள் வைகோ அவர்களுக்கு எதிராகவும் அதிமுக கூட்டணிக்கு எதிராகவும் கோசம் எழுப்பினார்களே?

ஆம் உண்மைதான் .

சரியாக எட்டு மன்னிக்கு வரவேண்டிய குருவாயூர் புகைவண்டி கால தாமதமாக ஒன்பது மணி பக்கத்தில் வந்தது.

எட்டு மணி முதல் வைகோ அவர்கள் கால் கடுக்க காட்திருண்டார்கள் . நாங்கள் அவர்களிடம் கூட கேட்டோம்

" எவ்வளவோ பிரச்சினைகள் தொகுதி பங்கீட்டில் உள்ளது . உங்களுக்காக தாயகத்தில் கிட்டத்தட்ட நூறு பேர் காத்திருக்கிறார்கள் நீங்கள் இங்கே வரும் யார் என்று தெரியாத மாணவர்களுக்காக காதிருக்க்ரீர்கலே "

"வருவது யார் என்பது முக்கியம் இல்லை , இன்று எனக்கு வந்த செய்தி (லண்டன் லிருந்து) அங்கே (ஈழத்தில்)இன்னும் சில நாட்களில் அனைத்து தமிழர்களையும் கொல்ல எல்லா வேலைகளையும் இந்தியாவும் இலங்கை அரசாங்கமும் சேர்ந்து செய்துவிட்டது , அவர்களுக்காக அவர்களின் ஆதரவிற்காக வரும் எந்த குரலும் , அது யாராக இருந்தாலும் அவர்களை உற்சாக படுத்த வேண்டும் . அதற்காகத்தான் வந்தேன் " என்றார்.


புகை வண்டி வந்தது . மதிமுகவினர் சில நூறு பெரும் வந்திருந்தனர். வெள்ளையனும் வந்திருந்தார்.

மாணவர்கள் கோசம் போட்டனர்.

மதிமுகவினரும் கோசம் போட்டனர்.

உச்சமாய் திரு வைகோ அவர்களே கோசம் போட்டார்.
பின் பேச ஆரம்பித்தார் , மாணவர்களில் பல பேர் கேட்டனர் , வைகோ வந்ததனால் , நிருபர்கள் மாணவர்கள சிலரை தள்ளிவிட்டு அவரை சூழ்ந்து கொண்டனர் . இதில் சில மாணவர்கள் கடுப்பானார்கள். இதைப்பற்றியே சில மாணவர்கள் அதிமுக எதிர்ப்பு கோசம் போட்டார்கள்.

வைகோ வே வெளியே போ ,என்று இரண்டு பேர் கத்தினார்கள் , அவர்கள் அனைவரின் போட்டோ வும் இங்கே போடுகிறோம் அவர்கள் அனைவரும் வைகோ வை ஆரம்பம் முதல் திட்ட முனையும் திமுகவை சேர்ந்தவர்கள்.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Followers

News Archive

About Me

My photo
முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.