ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com

Saturday, February 28, 2009

ஈழத்தமிழருக்காக

ஈழத்தமிழருக்காக தீக்குளித்த என் கணவர் தியாகிக்கு பணம் வேண்டாம் - அம்மு ஈழத்தமிழருக்காக தீக்குளித்த என் கணவர் தியாகத்திற்கு பணம் எதுவும் வேண்டாம் என மனைவி அம்மு தெரிவித்துள்ளார். நேற்று இரவு 10 மணியளவில் தேமுதிகவின் தீவிர தொண்டரான வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம். இவரது மகன் 36 அகவையுடைய சீனிவாசன் இலங்கை தமிழர்களுக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மேலும் ஏதாவது செய்ய வேண்டும், அப்பாவி தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும், என்று கூறிக்கொண்டே வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். உடல் முழுவதும் வெந்த நிலையில் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக அவரை வேலூர் அரசு வைத்தியசாலைக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் மாற்றப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சீனிவாசனின் உடல் நலம் குறித்து பார்த்தும் விசாரிப்பதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்ற போது சீனிவாசனின் மருத்துவசெலவுக்காக 10ஆயிரம் கொடுத்தார். அப்போது அவரின் மனைவி அம்மு இக்கருத்தைத் தெரிவித்து பணம் வேண்ட மறுத்துவிட்டார்.

சீனிவாசன் ஒரு பிள்ளையின் தந்தையாவார். எனினும் வைகோ பிடிவாதமாக இது மருத்துவசெலவுக்காகத்தான். இதை வாங்கிக்கொள்வதில் ஒன்றும் தப்பில்லை என்று கூறி பணத்தை கொடுத்தார்

தீக்குளித்த வாலிபர்-கண்ணீர் விட்டு அழுத வைகோ

வேலூர்: இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த தேமுதிக தொம்டர் சீனிவாசனை மருத்துவமனையி்ல் பார்க்க வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்ணீ்ர் விட்டு அழுதார்.வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த தேமுதிக தொண்டரான சீனிவாசன் (36) நேற்று முன்தினம் இரவு இலங்கை தமிழர்களை காப்பாற்றக்கோரி தீக்குளித்தார்.பலத்த தீக்காயமடைந்த அவர் வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந் நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்றிரவு சீனிவாசனை சந்திக்க வந்தார். எரிந்துபோன நிலையில் குற்றுயிராகக் கிடக்கும் அவரைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுத வைகோ சீனிவாசனின் மனைவிக்கு ஆறுதல் கூறினார். டாக்டர்களிடம், சீனிவாசனின் நிலை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய வைகோ,வள்ளிப்பட்டு சீனிவாசன் இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்துள்ளார். அவர் தேமுதிகவில் முழு ஈடுபாட்டுடன் பாடுபட்டு வந்துள்ளார்.
சிகிச்சை பெற்று வரும் சீனிவாசனின் மனைவி கண்ணீர் விட்டு கதறுகிறார். தேமுதிக கட்சி தலைவருக்காக எந்த கட்சி கூட்டம் நடந்தாலும், அவரது எந்த படமாக இருந்தாலும் சென்று பார்ப்பார் என்று கூறுகிறார்.இலங்கை தமிழர்களுக்காக தீக்குளிக்க போகிறேன் என்று கூறியபோது வேடிக்கையாக சொல்கிறார் என்று நினைத்தேன். எனது கணவரின் உடல் முழுவதும் வெந்து போய் இருப்பதால் எனது ஒரே மகன் அவரை பார்க்க வரவே அச்சப்படுகிறான். அவர் பிழைக்கவில்லை என்றால் நானும், எனது மகனும் உயிரோடு இருக்க மாட்டோம் என்று கூறுகின்றார்.
இதற்கு நான் என்ன பதில் சொல்ல (கண் கலங்குகிறார்). இந்த சம்பவம் நெஞ்சை பிளக்கிறது. லட்சக்கணக்காக மக்களை கொல்லும் திட்டம் இலங்கையில் நடக்கிறது.இலங்கையில் தமிழர்களை கொல்வதற்கு ஆயுதம் கொடுத்து விட்டு, அவர்களுக்கு மருந்து வழங்க ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் நிதி திரட்ட போவதாக சொல்கிறார்கள். அந்த நிதி யாருக்கு கொடுப்பதற்கு? சிங்கள ராணுவத்திற்கா?துளி மருந்து வாங்கவும் நிதி வழங்க கூடாது. அது முறையாக இலங்கை தமிழர்களுக்கு போய் சேராது.இதுவரை அனைத்து கட்சி கூட்டத்தை பிரதமர் கூட்டவில்லை. லண்டனில் கூட இலங்கை பிரச்சினை குறித்து 3 நாட்கள் விவாதம் நடந்தது. இங்கு நாம் 7 கோடி பேர் இருந்தும் இந்திய நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவில்லை.இலங்கையில் போரை நிறுத்தகோரி, இந்த நிமிடம் வரை இந்திய அரசு சார்பில் சோனியா காந்தியோ, மன்மோகன் சிங்கோ, பிரணாப் முகர்ஜியோ இலங்கை அரசை வலியுறுத்தவில்லை.வினையை விதைத்திருக்கிறார்கள், வினையை அறுப்பார்கள்.வக்கீல்களை, போலீசார் தாக்கியது திட்டமிட்ட தாக்குதல். போலீஸ் அதிகாரிகள் அரசு சொன்னதை கேட்டுக்கொண்டு செய்தனர்.
வக்கீல்களுக்கு ஆதரவாக தொடர்ந்து போராடுவோம்.தாக்குதல் நடத்திய போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட வேண்டும். முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றார் வைகோ.

முகர்ஜிக்கு எதிராக கருப்புக் கொடி-துடைப்பம் போராட்டம்: வைகோ கைது!

தூத்துக்குடி: இன்று தூத்துக்குடி வந்த மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு கருப்புக் கொடி காட்ட ஊர்வலமாக சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டார்.கருப்புக் கொடி மற்றும் செருப்பு, துடைப்பங்களை ஏந்தி ஊர்வலம் சென்ற நூற்றுக்கணக்கான மதிமுக தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஆகியவை இணைந்து தூத்துக்குடியில் 1000 மெகாவாட் திறன் கொண்ட புதிய அன்ல் மின் நிலையத்தை அமைக்கின்றன.108 ஹெக்டேர் பரப்பில் அமையும் இந்த அனல் மின் நிலையம் ரூ.4,900 கோடி செலவில் அமைகிறது. தலா 500 மெகாவாட் திறன் உடைய 2 பிரிவுகள் கொண்ட அனல் மின் நிலையமாக இது நிறுவப்படுகிறது.இதற்கான அடிக்கல் நாட்டு விழா தூத்துக்குடி, எட்டயபுரம் ரோட்டில் உள்ள சங்கரப்பேரி விலக்கு அருகே இன்று நடக்கிறது. இதில் வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.
இதில் மத்திய நிலக்கரிதுறை அமைச்சர் சந்தோஷ் பக்ரூடியா, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், டி.ஆர்.பாலு, மணிசங்கர் அய்யர், ஆ.ராசா, டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஜி.கேவாசன், ஈ.வி.கே. எஸ்.இளங்கோவன், ஆர்.வேலு, எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், எஸ்.ரகுபதி, கே.வேங்கடபதி, ராதிகா செல்வி, நாராயணசாமி, தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்த விழாவில் பங்கேற்க பிரணாப் முகர்ஜி தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் தூத்துக்குடி சென்றார்.ஈழத் தமிழர்களுக்கு எதிரான போக்கை மத்திய அரசு கடைப்பிடிப்பதாகவும், அதில் பிரணாப் முகர்ஜியின் பங்கு அதிகம் என்றும் தமிழகத்தில் இலங்கைத் தமிழர் ஆதரவு அமைப்புகள் குறைகூறி வருகின்றன.இதற்கிடையே தூத்துக்குடிக்கு வரும் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு கருப்புகொடி காட்டப்போவதாக இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் அறிவித்திருந்தது.இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வெளியிட்ட அறிக்கையில்,இலங்கையில் போர் நிறுத்தம் செய்வதை வலியுறுத்தாமலும், தமிழர்களின் மன உணர்வுகளை கொச்சைப்படுத்தும் வகையிலும் தொடர்ந்து பேசிவரும் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பிற்பகல் 3 மணிக்கு தூத்துக்குடி வருகிறார். அவருக்கு கருப்பு கொடி காட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளை சேர்ந்தவர்களும், மற்றும் தமிழ் இன உணர்வாளர்களும் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இதன்படி தூத்துக்குடி ராஜாஜி பூங்கா அருகே ஆர்ப்பாட்டம் நடத்தி பிரணாப் முகர்ஜிக்கு கருப்புக்கொடி காட்ட வைகோ இன்று தூத்துக்குடி வந்தார்.
வைகோ தலைமையில் மதிமுகவினர் மற்றும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் பிரணாப்புக்கு எதிராக கறுப்புக் கொடி, செருப்பு மற்றும் துடைங்களை ஏந்தியபடி நூற்றுக்கணக்கில் ஊர்வலமாக சென்றனர்.
இதையடுத்து வைகோ, விருதுநகர் மதிமுக எம்.எல்.ஏ, வரதராஜன், சிவகாசி மதிமுக எம்.எல்.ஏ ஞானதாஸ் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

Thursday, February 26, 2009

உலகத் தலைவர்களுக்கான கோரிக்கை படிவங்களில் கையெழுத்திடுங்கள்: வைகோ மன்றாட்ட வேண்டுகோள்


ஈழத் தமிழ் மக்களைக் காக்கவும் சிங்கள அரசு திட்டமிட்டுள்ள பேரழிவுத் தாக்குதலைத் தடுக்கவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கும், அமெரிக்க, ரஷ்ய அரச தலைவர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கும் கோரிக்கைப் படிவங்களில் கையெழுத்திடுமாறு தமிழ்நாட்டு மக்களிடம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ மன்றாட்ட வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக வைகோ இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கைத் தீவில், சிங்கள அரசு ஏவிவிட்டுள்ள முப்படைத் தாக்குதலால், குறிப்பாக, அனைத்துலக நாடுகள் தடைவிதித்துள்ள கொத்துக்குண்டுகள் - நெருப்பு மண்டலம் ஏற்படுத்தும் குண்டுகள் - இவற்றை வீசும் வான் வழித் தாக்குதலால், ஐந்து லட்சம் ஈழத் தமிழ் மக்களும் பேரழிவுக்கு ஆளாகும் பயங்கரமான அபாயம் சூழ்ந்திருக்கிற நிலையில், விடுதலைப் புலிகளை எப்படியாவது ஒழித்துக்கட்ட வேண்டும் என்று சிறிலங்கா அரசுடன் கூட்டுச் சதித்திட்டம் வகுத்துள்ள இந்திய அரசு இதனால் படுகொலைக்குள்ளாகும் லட்சக்கணக்கான தமிழ் மக்களைப் பற்றி துளியளவும் கவலை கொள்ளாது தமிழக மக்களையும், இந்திய மக்களையும், உலக நாடுகளையும் ஏமாற்றுவதற்காக திட்டமிட்டு சில அப்பட்டமான பொய்களைத் துணிந்து சொல்கிறது.

அதனால்தான் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பெப்ரவரி 18 ஆம் நாள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், எழுபதாயிரம் பேர்தான் முல்லைத்தீவில் இருப்பதாக ராஜபக்ச அறிவிக்கின்ற அதே எண்ணிக்கையை அறிவித்தார்.பாதுகாப்பான இடங்களைத் தேடி தமிழர்கள் செல்லும்போது அவர்கள் புலிகளால் கொல்லப்படுவதாக, சிறிலங்கா அரச தலைவர் போடும் அக்கிரமமான பழியை பிரணாப் முகர்ஜியும், புலிகள் மீது குற்றச்சாட்டாகச் சொன்னார்.

முப்பத்தையாயிரம் தமிழர்கள் புலிகளின் பிடியில் இருந்து வெளியே வந்துவிட்டதாக சிறிலங்கா அரச தலைவர் கூறியதையே இவரும் தெரிவித்தார். உண்மையில் பத்தாயிரத்துக்கும் உட்பட்டவர்களே அரசாங்கம் முதலில் சொன்னதை நம்பி, பாதுகாப்பான இடம் எனக் கருதி வந்தபோது 2,000-க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனை உள்ளிட்ட பாதுகாப்பு வலயப் பகுதிகளில் சிங்கள இராணுவத் தாக்குதலால் கொல்லப்பட்டனர். 3,000-க்கும் அதிகமானோர் படுகாயமுற்றனர்.

மருத்துவமனைகள் மீது, குண்டு வீசியதை அமெரிக்க அரசும், இங்கிலாந்து அரசும் கண்டித்தன. ஆனால், இந்திய அரசு எந்தக் கண்டனமும் தெரிவிக்கவில்லை. அடுத்த ஒரு சில நாட்களுக்குள் பேரழிவுக் குண்டுகளை முல்லைத்தீவு எங்கும் வான் வழியாக வீசியும் தரை வழி எறிகணை, ஏவுகணை, பீரங்கித் தாக்குதல் நடத்தியும் லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவிக்க சிங்கள அரசு திட்டமிட்டுள்ளது.

ஜெர்மனியிலும், ருவண்டாவிலும் நடத்தப்பட்ட பேரழிவைவிட இது கொடூரமானதாக இருக்கும். லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்படும் கொடூரத்தை மறைப்பதற்காகவே முல்லைத்தீவில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கையை சிங்கள அரசும், இந்திய அரசும் மிகக் குறைத்து அறிவிக்கின்றன.

தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காகவும், பெரும் பழியில் இருந்து தப்பிப்பதற்காகவும் ஈழத் தமிழர்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை தமிழ்நாடு, ஆந்திரா, கேரள மாநிலங்களில் சேகரிக்கச் சொல்லி காங்கிரஸ் கட்சிக்கு சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளதாக மோசடியான அறிவிப்பை காங்கிரஸ் கட்சி செய்துள்ளது.

இந்தத் துரோக நாடகத்தில் பங்குதாரராக இருக்கும் கலைஞர் கருணாநிதி தன் பங்குக்கு மருந்து அனுப்பத் தயார் என்றும் மருத்துவர்களையும் அனுப்பத் தயார் என்றும் அறிவித்துள்ளார்.

மத்திய அரசினுடைய துரோகத்தின் உச்சகட்டமாக நேற்று செவ்வாய்க்கிழமை வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி நாம் கற்பனை கூடச் செய்ய முடியாத ஒரு கோயபல்ஸ் பொய்யை அவிழ்த்து விட்டுள்ளார். அதில், "போர்ப் பகுதியில் உள்ள அப்பாவித் தமிழர்களை அனைத்துலக பார்வையாளர்கள் முன்னிலையில் ஒப்படைக்கத் தயார் என விடுதலைப் புலிகள் வாக்குறுதி அளித்துள்ளதாகவும் ஆகவே, அந்த மக்களை வெளியேற்றுவதற்கு தேவையான கப்பல் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கத் தயாராக உள்ளது" என்றும் கூறியுள்ளார்.இதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன?உண்மை நிலை என்ன?விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்று சிறிலங்கா அரசின் பொய்ப் பிரச்சாரத்தில் ஏமாந்துபோன ஒரு சில நாடுகளும் இணைத் தலைமை நாடுகளும் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்று கூறியதற்கு விடுதலைப் புலிகள் மிகக் தெளிவான அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கும், அமெரிக்கக் குடியரசுத் தலைவருக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இணைத் தலைமை நாடுகளுக்கும் அனுப்பி உள்ளனர்.அதில், "சிங்கள அரசின் பயங்கரவாதத்தால் கொடூரமாக நசுக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் தங்கள் உரிமைகளைக் காக்கவே ஆயுதம் ஏந்தி உள்ளனர் என்றும் அத் தமிழ் மக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் தரும் அரசியல் தீர்வு ஏற்படும்வரை ஆயுதங்களைக் கீழே போட இயலாது என்றும் அனைத்துலக நாடுகள் சிறிலங்கா அரசு நடத்தும் இனப்படுகொலையைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்" தெரிவித்து உள்ளனர்.

"தமிழ் மக்களை சிறிலங்கா அரசு திறந்து வைத்திருக்கும் நலன்புரி நிலையங்கள் எனும் இராணுவ வதை முகாம்களுக்கு கொண்டு போகும்படி கூறுவது ஒரு சுத்தமான தமிழ் இன அழிப்பு ஊக்குவிப்பு முயற்சியாகும். எனவே, வன்னிக்கு, முல்லைத்தீவுக்கு நடுநிலையான உலக ஊடகவியலாளர்களை, மனித உரிமை அலுவலர்களை, கண்காணிப்பாளர்களை அனுப்பி நிலையை நேரில் கண்டு போரை நிறுத்தச் செய்வதற்கும், உணவும், மருந்தும் கிடைக்கச் செய்வதற்கும் நடவடிக்கை எடுப்பது மட்டுமே உடனடித் தேவையான மனிதாபிமானப் பணியாகும்" என்றும் புலிகள் தெரிவித்து உள்ளனர்.

மீண்டும் அமெரிக்க அரசு போரை நிறுத்தச் சொல்கிறது. இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க அரசுகளும் அதனையே வலியுறுத்துகின்றன. ஆனால், உண்மைகளை முழுக்க முழுக்க மறைத்து விட்டு பொய்த்தகவல்களை நாடாளுமன்றத்தில் சொல்லி, தமிழ்நாட்டு மக்களையும் ஏமாற்றி விட்டு சிறிலங்கா அரசு நடத்தும் தமிழ் இன அழிப்புப் போருக்கு ஏற்கனவே ஏராளமான ஆயுதங்களைக் கொடுத்து உதவிய இந்திய அரசு இப்போது நேரடியாகவே நமது கடற்படையையும், வான் படையையும் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது.

இந்த அபாயத்தைத் தடுக்க தமிழ் மக்களே! உங்களை மன்றாடி வேண்டுகிறேன். ஐக்கிய நாடுகள் சபையும் குறிப்பாக அதன் பாதுகாப்புச் சபையும் தலையிட்டு ஈழத் தமிழ் மக்களைக் காக்கவும் சிங்கள அரசு திட்டமிட்டுள்ள பேரழிவுத் தாக்குதலைத் தடுக்கவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கும், அமெரிக்க, ரஷ்ய அரச தலைவர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கும் கோரிக்கைப் படிவங்களில் கையெழுத்திடுங்கள்.

இரண்டு கோடி மக்களுக்கும் குறையாத எண்ணிக்கையில் கையெழுத்துக்களைப் பெற்று அவர்களுக்கு அனுப்பி வைக்க இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு உதவுங்கள். பள்ளியில், கல்லூரியில் பயிலும் மாணவர்களே! கையெழுத்திடுங்கள். ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களே! விவசாயப் பெரு மக்களே! அரசு ஊழியர்களே!அனைத்துத் துறையையும் சார்ந்த பெரியோர்களே! தாய்மார்களே! தாமதமின்றி செயற்படுங்கள்! கையெழுத்திடுங்கள் தாள்பணிந்து வேண்டுகிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீக்குளிப்புகள் வேண்டாம்- உலுக்குகின்றன: வைகோ

சென்னை: தீக்குளிப்பு சம்பவங்கள் எனது இதயத்தை உலுக்கி எடுக்கின்றன.
இனியும் இதுபோன்ற தீக்குளிப்புகளில் யாரும் ஈடுபடக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்திய வம்சாவளித் தமிழரான கோகுல ரத்தினம் இலங்கைக்கு மூன்று தலைமுறைக்கு முன்னால் சென்ற குடும்பத்தில் பிறந்தவர். 25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் வந்து விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் ஆனையூர் ஊராட்சி காந்தி நகரில் சிலோன் காலனியில் வசித்து வந்தார். ஈழத் தமிழர்கள் படும் துன்பத்தை எண்ணி பல நாட்களாக வேதனையில் தவித்து வந்துள்ளார். தியாகி முத்துக்குமார் தீக்குளித்து இறந்தபோது மனம் வெதும்பி வருந்தி உள்ளார். அவர் வசிக்கின்ற அத்தெருவில் முத்துக்குமார் வீரவணக்க சுவரொட்டிகள் காணப்படுகின்றன. அவர் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்துக்கு முன்னால் தீக்குளித்து உடல்கருகி அந்த இடத்திலேயே மாண்டு விட்டார். அவர் எழுதிய கடிதமும், ரேசன் அட்டையும் பக்கத்தில் கிடந்தது. அக்கடிதத்தில் இலங்கைத் தமிழருக்காகத் தீக்குளிக்கிறேன் என்று ஒன்றுக்கு மூன்று முறை குறிப்பிட்டு எழுதி உள்ளார். நான் ஒரு திமுக தொண்டன் உடன் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும். உடன் காப்பாற்று. தமிழா எழுந்திரு, தமிழா உயிரைக்கொடு என் தமிழ்மக்களைக் காப்பாற்ற எனது உயிரை அர்ப்பணிக் கிறேன். இதுதான் எனது கடைசி ஆசை உடனடியாக என் தமிழர்களைக் காப்பாற்று என்று வேண்டி விரும்புகிறேன்.டாக்டர் கலைஞர் உடல் நலம் முன்னேற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் என் உயிரை தமிழ் மக்களுக்காகவும், தமிழினத் தலைவர்களுக்காகவும் அர்ப்பணிக்கிறேன்.
இலங்கையில் வாழும் தமிழர்களுக்காகவும், இந்தியாவில் வாழும் தமிழக மக்களுக்காகவும் நான் தீக்குளித்து எனது உயிரை தமிழ் உணர்வுக்காக என் உயிரை தமிழ் மண்ணுக்காக விட ஆசைப்படுகிறேன். தமிழினத் தலைவர் உடல்நிலை நல்லபடியாக குணமடைய என்னுடைய உயிரை விடுகிறேன். திருமாவளவனைக் கைது செய்யாதே- வைகோவை கைது செய்யாதே- ராமதாசை கைது செய்யாதே- பழ. நெடுமாறனைக் கைது செய்யாதே. நான் ஒரு தமிழன் என்று எழுதி கோகுலரத்தினம் என்று கையெழுத்து இட்டுள்ளார்.இவருக்கு ஒரு மகனும், இரண்டு புதல்வியரும் உள்ளனர். மூத்த பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டது. இவரது மகன் கிருஷ்ண ஆனந்தராஜ் கும்பகோணம் கள்ளப்புலியூர் கல்லூரியில் பி.ஏ. படிக்கிறார்.ஈழத் தமிழர்களுக்காக ஏற்கனவே தீக்குளித்து உயிர்துறந்த முத்துக்குமார், பள்ளப்பட்டி ரவி, சீர்காழி ரவிச்சந்திரன், சென்னை அமரேசன், கடலூர் தமிழ்வேந்தன், சென்னை சிவப்பிரகாசம் வரிசையில் ஏழாவது தியாகியாக கோகுலரத்தினம் தீக்குளித்து ஈழத்தமிழருக்காக தன்னுயிரை மாய்த்துக் கொண்டார். அவரது உன்னதமான தியாகத்தைப் போற்றி அவரது உடலுக்கு மலர்மாலை சூட்டி வீரவணக்கம் செலுத்தினேன்.
ஈழத் தமிழர்களைக் காக்க நெருப்பில் தங்களை கருக்கிக் கொள்ளும் துணிவும், தியாகமும் நம் நெஞ்சை உலுக்குகிறது எனினும், அந்தக் குடும்பங்களின் வேதனையும், துயரமும் அதைவிட கடுமையானதாகும்.எனவே, இனியாரும் தீக்குளிக்க வேண்டாம். உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று மன்றாடி வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.

ஈழத்தமிழர்களை காக்க தீக்குளிக்கும் தியாகம் நெஞ்சை உலுக்குகிறது: வைகோ

ஈழத்தமிழர்களைக் காக்க நெருப்பில் தங்களை கருக்கிக் கொள்ளும் துணிவும், தியாகமும் நம் நெஞ்சை உலுக்குகிறது எனினும், அந்தக் குடும்பங்களின் வேதனையும், துயரமும் அதைவிட கடுமையானதாகும். எனவே, இனியாரும் தீக்குளிக்க வேண்டாம். உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று மன்றாடி வேண்டுகிறேன்’’ என்று வைகோ தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழருக்காக தீக்குளிக்கும் தமிழர்கள் குறித்து மதிமுக பொது செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், ’’இந்திய வம்சாவளித் தமிழரான கோகுலரத்தினம் இலங்கைக்கு மூன்று தலைமுறைக்கு முன்னால் சென்ற குடும்பத்தில் பிறந்தவர். 25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் வந்து விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் ஆனையூர் ஊராட்சி காந்தி நகர் சிலோன் காலனியில் வசித்து வந்தார். ஈழத்தமிழர்கள் படும் துன்பத்தை எண்ணி பல நாட்களாக வேதனையில் தவித்து வந்துள்ளார். தியாகி முத்துக்குமார் தீக்குளித்து இறந்தபோது மனம் வெதும்பி வருந்தி உள்ளார். அவர் வசிக்கின்ற அத்தெருவில் முத்துக்குமார் வீரவணக்க சுவரொட்டிகள் காணப்படுகின்றன. அவர் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்துக்கு முன்னால் தீக்குளித்து உடல்கருகி அந்த இடத்திலேயே மாண்டு விட்டார். அவர் எழுதிய கடிதமும், ரேசன் அட்டையும் பக்கத்தில் கிடந்தது. அக்கடிதத்தில் இலங்கைத் தமிழருக்காகத் தீக்குளிக்கிறேன் என்று ஒன்றுக்கு மூன்று முறை குறிப்பிட்டு எழுதி உள்ளார். நான் ஒரு தி.மு.க. தொண்டன் உடன் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும். உடன் காப்பாற்று. தமிழா எழுந்திரு, தமிழா உயிரைக்கொடு என் தமிழ்மக்களைக் காப்பாற்ற எனது உயிரை அர்ப்பணிக்கிறேன். இதுதான் எனது கடைசி ஆசை உடனடியாக என் தமிழர்களைக் காப்பாற்று என்று வேண்டி விரும்புகிறேன். டாக்டர் கலைஞர் உடல் நலம் முன்னேற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் என் உயிரை தமிழ் மக்களுக்காகவும், தமிழினத் தலைவர்களுக்காகவும் அர்ப்பணிக்கிறேன். இலங்கையில் வாழும் தமிழர்களுக்காகவும், இந்தியாவில் வாழும் தமிழக மக்களுக்காகவும் நான் தீக்குளித்து எனது உயிரை தமிழ் உணர்வுக்காக என் உயிரை தமிழ் மண்ணுக்காக விட ஆசைப்படுகிறேன். தமிழினத் தலைவர் உடல்நிலை நல்லபடியாக குணமடைய என்னுடைய உயிரை விடுகிறேன்.

திருமாவளவனைக் கைது செய்யாதே
வைகோவை கைது செய்யாதே
ராமதாசை கைது செய்யாதே
பழ. நெடுமாறனைக் கைது செய்யாதே.
நான் ஒரு தமிழன் என்று எழுதி கோகுலரத்தினம் என்று கையெழுத்து இட்டுள்ளார். இவருக்கு ஒரு மகனும், இரண்டு புதல்வியரும் உள்ளனர். மூத்த பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டது. இவரது மகன் கிருஷ்ண ஆனந்தராஜ் கும்பகோணம் கள்ளப்புலியூர் கல்லூரியில் பி.ஏ. படிக்கிறார். ஈழத்தமிழர்களுக்காக ஏற்கனவே தீக்குளித்து உயிர்துறந்த முத்துக்குமார், பள்ளப்பட்டி ரவி, சீர்காழி ரவிச்சந்திரன், சென்னை அமரேசன், கடலூர் தமிழ்வேந்தன், சென்னை சிவப்பிரகாசம் வரிசையில் ஏழாவது தியாகியாக கோகுலரத்தினம் தீக்குளித்து ஈழத்தமிழருக்காக தன்னுயிரை மாய்த்துக் கொண்டார். அவரது உன்னதமான தியாகத்தைப் போற்றி அவரது உடலுக்கு மலர்மாலை சூட்டி வீரவணக்கம் செலுத்தினேன். ஈழத்தமிழர்களைக் காக்க நெருப்பில் தங்களை கருக்கிக் கொள்ளும் துணிவும், தியாகமும் நம் நெஞ்சை உலுக்குகிறது எனினும், அந்தக் குடும்பங்களின் வேதனையும், துயரமும் அதைவிட கடுமையானதாகும். எனவே, இனியாரும் தீக்குளிக்க வேண்டாம். உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று மன்றாடி வேண்டுகிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tuesday, February 24, 2009

புலிகளை ஒழித்துக்கட்டுவோம் என்று கூறும் ராஜபக்சவின் நாக்கை அறுக்க முடியாதா: வைகோ ஆவேசம்

இலங்கையில் தாய்மார்கள், குழந்தைகள் அழிக்கப்படும் நிலையில் அவர்களுக்கு அரணாக போராடும் விடுதலைப்புலிகளை ஒழித்துக்கட்டுவோம் என்று கூறும் ராஜபக்சேவின் நாக்கை அறுக்க முடியாதா? என்று நாங்கள் துடித்துக்கொண்டு இருக்கிறோம். என்று மதிமுக பொது செயலாளர் வைகோ என தெரிவித்தார்

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படக்கோரியும், சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் மதுரையில் வக்கீல்கள் தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக உண்ணாவிரதம் இருந்த வக்கீல்களை தமிழர் தேசிய பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், மதிமுக பொது செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் உட்பட பலர் வாழ்த்தி பேசினர். மாலை 5 மணி அளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். இதில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ பேசும்போது, ’’தமிழீழ மக்களின் துன்பத்தை தவிர்க்க உறக்கத்தில் இருக்கும் தாய் தமிழகம் விழிக்காதா என்று நினைத்த நேரத்தில் தொப்புள்கொடி உறவினரான சகோதரர்களை பாதுகாக்க, வக்கீல்கள் போராட்டத்தில் குதித்திருப்பது பாராட்டுக்குரியது. எந்த போராட்டம் என்றாலும் கந்தகம் என்னும் தீப்பொறி களம் பதிக்க வேண்டும். அதுபோல தீக்குளித்து இறந்த முத்துக்குமார் என்னும் கந்தகம் மூட்டிய தீயை இனி யாராலும் அணைக்க முடியாது. அது இன்று ஐ.நா.சபையிலும் எரிகிறது. இலங்கை தமிழர்களுக்காக 4 மாதங்களாக போராட்டம் நடக்கிறது. தமிழகத்தில் இருந்து கொண்டு இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் சுப்பிரமணியசாமி மீது யாரும் தாக்குதல் நடத்தவில்லை. தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க முட்டைகளை வீசி உள்ளனர். தேனி மாவட்டத்தில் 400 அடி பள்ளத்தில் விழுந்த சிறுவன் உயிர்பிழைக்க மாட்டானா என்று அவனது தாயார் போல நாமும் எப்படி ஏங்கினோம். அதேபோல இலங்கையில் தாய்மார்கள், குழந்தைகள் அழிக்கப்படும் நிலையில் அவர்களுக்கு அரணாக போராடும் விடுதலைப்புலிகளை ஒழித்துக்கட்டுவோம் என்று கூறும் ராஜபக்சவின் நாக்கை அறுக்க முடியாதா என்று நாங்கள் துடித்துக்கொண்டு இருக்கிறோம். சென்னை உயர்நீதிமன்றில் கற்களே இருக்காது. பொலிஸாரே திட்டமிட்டு மூட்டை, மூட்டையாக கற்களை கொண்டு வந்து வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். தற்காப்புக்காக வக்கீல்களும் தாக்குதலில் ஈடுபட்டதில் தவறில்லை. வக்கீல்களின் அறவழி போராட்டம் தொடர வேண்டும். அதற்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். என்றார்.

புலிகள் மக்களை வெளிவிடாமல் கேடயமாக வைத்துள்ளார்கள்...? இராஜிவை கொன்றதால்தானே இவ்வளவு பிரச்சினையும்...?

இலங்கை இராணுவத்தால் கொடூரமான‌ இன அழிப்பு யுத்தம் ஒரு பக்கத்தில் முன்னெடுக்கப்படுகின்ற‌ அதே வேளையில் இலங்கை அரசு அதிகாரிகளால் ஒரு பெரும் பொய் பரப்புரை யுத்தம் செய்யப்பட்டு வருகிறது. போதாத குறைக்கு இந்திய மத்திய, மாநில அரசியல்வாதிகள் தங்களது சுயலாபத்திற்காக மக்களை பல்வேறு வழிகளில் திசை திருப்பி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கின்றனர்.
ஆனால் மக்கள் கூடும் இடங்களிலெல்லாம் இலங்கை பிரச்சினையை பற்றித்தான் பேசி தர்க்கம் நடக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை சொல்கின்றனர்.களத்தில் நிகழும் போரை விட இந்தக் கருத்துப் போர் மிகவும் அபாயகரமானதாக உள்ளது.
மக்களின் மனதில் எழுகின்ற சந்தேகங்களை தீர்ப்பது அல்லது விளக்கிச் சொல்வது இப்போது மிகவும் அவசியமாகிறது.
புலிகள் ஏன் அப்பாவி மக்களை வெளியே விடாமல் மனித கேடயமாக வைத்துள்ளார்கள்?
ஒன்றை மட்டும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த இடத்தில் நாம் பெண்டாட்டி, பிள்ளைகளுடன் இருந்தால் புலிகளுடன் இருப்போமா? இல்லை இராணுவத்திடம் செல்வோமா? இன்றைக்கு வன்னி மக்களின் உறவினர்கள் உலகம் முழுவதும் 130 நாடுகளில் வசிக்கிறார்கள். அவர்கள் தங்கள் போராட்டங்களில் புலிக்கொடியையும், பிரபாகரனின் படத்தையும் வைத்துத்தான் போராட்டம் செய்கிறார்கள். மனித கேடயமாக பயன்படுத்தினால் உலகத்தமிழர்கள் ஒரே நாளில் புலிகளுக்கு எதிராக திரும்பி விடுவார்கள். எதிரியிடம் சிக்கி சின்னாபின்னாமாவதை காட்டிலும் உள்ளே இருப்பதே மேல் என்று மக்கள் நினைக்கிறார்கள். ராஜபுத்திரர்கள் தோல்வியை தழுவும் சூழ்நிலை வந்தால் பெண்கள் அனைவரும் தீயில் குதித்து உயிரை விடுவார்கள். ஆண்கள் பிறந்த மேனியுடன் போராடி வீரமரணம் அடைவார்கள். தமிழினமும் அவர்களை விட வீரத்தில் குறைந்தவர்கள் அல்ல. இந்தியாவும், உலக நாடுகளும்தான் அவர்களுக்கு உதவி செய்து காப்பாற்ற வேண்டும்.
புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு பேச்சுவார்த்தைக்கு வர வேண்டியதுதானே?
முன்னர் இராஜிவ்காந்தியை நம்பி புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்தார்கள். ஆயுதங்களை ஒப்படைத்த பிறகு அமைதிப்படை அவர்களை தாக்கியழிக்க நினைத்தது. ஒரு ஜனநாயக தீர்வு முன் வைக்கப்பட்டு அது இரு தரப்பினராலும் ஒத்துக் கொள்ளப்பட்ட பின்புதான் ஆயுதங்களை ஒப்படைப்பார்கள். ஆயுதங்கள் ஒப்படைப்பு என்பது பேச்சுவார்த்தையின் முடிவில் நடப்பது. அதை இப்போதே செய் என்பது மூலம் கட்டாயமாக போரை திணிக்கிறார்கள்.
பாதுகாப்பு வலயத்திற்கு வரும் மக்கள் மீது புலிகள் ஏன் தற்கொலை தாக்குதல் நடத்துகிறார்கள்?
ப‌டையின‌ர் வெளியிட்ட‌ காணொளியில் த‌ற்கொலை குண்டுதாரியின் உட‌லோ, ப‌டையின‌ரின் உட‌லோ காண்பிக்க‌ப்ப‌ட‌வில்லை. இராணுவமே வேண்டுமென்று பெண்களையும், குழந்தைகளையும் குறிவைத்துக் கொன்று விட்டு பழி போடுகிறார்கள். எல்லா தற்கொலைத் தாக்குதல்களிலும் குண்டுதாரியின் உடலையும், படை வீரர்களின் உடலையும் காண்பிப்பவர்கள் இப்போது மட்டும் ஏன் காண்பிக்க வில்லை?
புலிகள் ஏன் சகோதர போராளிகளையும் கொலை செய்கிறார்கள்?
பிர‌பாக‌ர‌ன் 18 அகவையில் இய‌க்க‌த்தை ஆர‌ம்பித்தார். இன்று வ‌ரை 30 ஆண்டு கால‌மாக‌ ம‌க்க‌ளுக்காக‌தான் போராடுகிறார். அவ‌ர் நினைத்திருந்தால் ஏதாவ‌து ஒரு நாட்டுக்குச் சென்று சுக‌மாக‌ வாழ்ந்திருக்க‌லாம். பிற போராளிகள் இலங்கை இராணுவத்துடனும், இந்திய உளவு அமைப்பான 'ரா' வுடனும் கைகோர்த்துக் கொண்டு புலிப் போராளிகளை கடத்துவது , கொலை செய்வது, காட்டிக் கொடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டதால்தான் அவர்களை ஒழித்துக் கட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இந்த சண்டையை வளர்த்து விட்டதே இந்திய 'ரா' நிறுவனம்தான். இலட்சக்கணக்கான மக்களையும், ஆயிரக்கணக்கான போராளிகளையும் இழந்து விட்டு சுதந்திரத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் போது அதற்கு தடைக்கற்களாக இருந்து குழப்புபவர்களை ஒழிக்காமல் என்ன செய்வது?
இராஜிவ் காந்தியை கொன்றதால்தானே இவ்வளவு பிரச்சினையும் வந்தது?
ப‌ஞ்சு மெத்தையில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌ இராஜிவ் வ‌ர‌லாறு தெரியாம‌ல் ஜெய‌வ‌ர்த்த‌னாவின் பேச்சையும், கூட‌ இருந்த‌ அதி மேதாவிக‌ளின் பேச்சையும் ந‌ம்பி ஈழப் பிரச்சினையில் காலை விட்ட‌தால்தான் இவ்வளவு பிரச்சினையும். இந்தியாவில் இராஜிவ் காந்தி ஹீரோ என்றால், இலங்கையில் அவர் வில்லனாகவே நடந்து கொண்டார். சிங்கள வீரன் அடித்த சரியாக பட்டிருந்தால் அவருடைய உயிர் அப்போதே போயிருக்கும்? சிங்களர், தமிழர் இருவருக்குமே அவருடைய நடவடிக்கைகள் பிடிக்கவில்லை. இரு தரப்பினரும் சண்டையிட்டுக் கொண்டால் அவர்களிடையே சமரசம் செய்து வைத்தால் அது நியாயம்.
அதை விடுத்து ஒரு பக்கம் சாய்ந்து இன்னொருவரை அடித்தால் அடிபட்டவன் சும்மா விடுவானா? சமாதானம் செய்து வைக்காமல் இராஜிவ்காந்தி இலங்கைக்கு ஒரு இலட்சம் பேர் கொண்ட படையை அனுப்பினார். அவர்கள் அங்கு 10,000 தமிழர்களை கொன்று குவித்தார்கள். பெண்களின் மார்புகளை அறுத்தெறிந்து, பாலியல் வெறியாட்டம் ஆடினார்கள். புலிகளிடம் அடைந்த தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் குழந்தைகள் என்று கூட பார்க்காமல் கொன்றுக் குவித்தார்கள். பெண்களும் குழந்தைகளும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட போது இராஜிவ் காந்தி தடுக்காமல் என்ன செய்து கொண்டிருந்தார்? அப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று தனது படைகளுக்கு உத்தரவிட வேண்டியதுதானே? படை வீரர்களை கட்டுப்படுத்த முடியாவிட்டால் எதற்குப் படை நடவடிக்கையை எடுக்க வேண்டும்?
உண்ணாநிலைப்போராட்டம் இருந்த‌ திலீபன் 5 சாதாரண கோரிக்கைகளைத்தான் முன் வைத்து அறப்போராட்டம் நடத்தினார். தனி ஈழ கோரிக்கை கூட அவர் அப்போது வலியுறுத்தவில்லை. சிங்களர்களை தமிழர் பகுதியில் குடியேற்ற வேண்டாம், தமிழர்களை சிங்கள காவலர்கள் துன்புறுத்தக் கூடாது என்பனவற்றைத்தான் கேட்டார். இந்திய அரசு நினைத்திருந்தால் ஒரு நொடிப்பொழுதில் அவற்றை நிறைவேற்றி திலீபனை காப்பாற்றிஇருக்க‌லாம். கண்டு கொள்ளாமல் இருந்து அவரை சாகடித்தார்கள். சமாதான பேச்சுவார்த்தைக்கு வந்த புலித்தளபதிகளை இலங்கை அரசு பிடித்து வைத்த போது காப்பாற்றச் சொல்லி இந்திய அரசை கெஞ்சிய போதும் காப்பாற்ற முன்வரவில்லை. 12 தளபதிகள் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்தார்கள். அமைதிப்படை இலங்கையில் தமிழர்களுக்கு செய்த கொடுமைகளை ஈழத்தமிழர்கள் என்றைக்கும் மறக்க மாட்டர்கள்.
இலங்கையின் இறையாண்மையில் இந்தியா எப்படி தலையிட முடியும்?
கிழக்கு பாகிஸ்தானை பிரித்து பங்களாதேஷ் என்ற தனி நாட்டை இந்தியா உருவாக்கவில்லையா? திபெத் மக்களுக்கு மற்றும் தலாய்லாமாவுக்கு அடைக்கலம் தரவில்லையா? அவையெல்லாம் முடியும் போது ஈழம் உருவாக தலையிட முடியாதா? இலங்கை அரசு புலிகளை பயங்கரவாதிகள் என்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்றும் சொல்கிறதே? அதில் எப்படி இந்தியா தலையிட முடியும்? காஸா படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் இந்திய அரசு இலங்கையை இதுவரை கண்டிக்கவில்லை. ஏனென்றால் இந்திய அரசுதான் போரை நடத்துகிறது.
தனி ஈழம் உருவானால் தமிழக மக்களும் ஈழத்துடன் சேர விரும்ப மாட்டார்களா?
மத்திய அரசு தமிழர்களின் உரிமைகளை பாதுகாத்தால் ஏன் தமிழக மக்கள் வேறு பக்கம் போகிறார்கள். ஆயிரத்தெட்டு போராட்டங்கள், தீக்குளிப்புகள் செய்த போதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புலிகளை பிடிக்கவில்லையென்றால் அப்பாவி மக்களையாவது காப்பாற்றலாமே? அதுவும் இல்லையென்றால் தமிழக மீனவர்களை தினமும் சுடுகிறதே இலங்கை கடற்படை? அதையாவது தட்டிக் கேட்கலாமே? ஒரு சுண்டைக்காய் நாட்டிற்கு ஒரு வல்லரசின் குடிமக்களை சுடும் அதிகாரத்தை மத்திய அரசுதானே வழங்கி இருக்கிறது. இந்தியாவில் இருந்து கொண்டு இவ்வளவு கத்தியும் ஒரு பயனும் இல்லையென்றால் மக்கள் அவ்வாறுதான் முடிவெடுப்பார்கள்? தமிழர்களின் உயிரை வட இந்தியர்கள் மதிப்பதே இல்லை. செத்த பிறகு கொடுத்த நட்ட ஈடு பணத்தை முன்னமே கொடுத்திருந்தால் ஆப்கனில் கடத்தப்பட்ட தமிழன் சைமன் உயிரை காப்பாற்றி இருக்கலாமல்லவா.........

உண்மையை மறைப்பதற்காக முதல்வர் உண்ணாவிரத நாடகத்தை நடத்துகிறார்-பழ.நெடுமாறன்

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீதான காவல் துறை தாக்குதலைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் அப்போராட்டத்துக்கு அனுமதி அளிக்க காவல் துறை மறுத்து விட்டது.
இந்நிலையில் தங்களின் அடுத்தகட்ட போராட்டம் பற்றி அந்த இயக்கத்தின் தலைவர்கள் சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அறிவித்தனர்.
பழ.நெடுமாறன்: மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியது:
முதல்வரின் உத்தரவின்பேரில்தான் காவல்துறையினர் செயல்பட்டுள்ளனர். இந்த உண்மையை மறைப்பதற்காக முதல்வர் உண்ணாவிரத நாடகத்தை நடத்துகிறார். அத்துமீறி செயல்பட்ட காவல்துறை தலைவர், சென்னை மாநகர் ஆணையர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் வற்புறுத்தும் கோரிக்கை மிகமிக நியாயமானது. இதைச் செய்யாமல் பிரச்னை தீராது.
தவறு செய்யும் அதிகாரிகளை காப்பாற்ற முயற்சிக்கிறார். வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட பிரச்னையிலும் உயர் அதிகாரிகளை காப்பாற்றவும் தான் உத்தரவிட்டதை மூடிமறைக்கவும் முயற்சி செய்கிறார்.
மரு. ச.இராமதாசு கூறியதாவது:
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்ட போதே இந்த இயக்கம் அரசியல் மற்றும் தேர்தல் ரீதியான பணிகளில் கவனம் செலுத்தாது என தெளிவாக தெரிவித்தோம்.
இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி பல தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகிறோம். இந்த இயக்கத்துக்குப் பின்னால் தமிழக மக்கள் அணிவகுப்பதை பொறுக்க முடியாத முதல்வர் கருணாநிதி, தி.மு.க. ஆட்சியைக் கலைக்க நாங்கள் சதி செய்வதாகக் கூறுகிறார்.
காங்கிரஸ் கட்சியின் 35 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு நீடிக்கும் வரை தி.மு.க. அரசை யாராலும் கலைக்க முடியாது. இந்நிலையில் நாங்கள் எவ்வாறு சதி செய்ய முடியும் என்பதை கருணாநிதி விளக்க வேண்டும்.
இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலால் கொதித்துப் போயுள்ள வழக்கறிஞர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை ஒடுக்கவே, காவல் துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு உத்தரவிட்டவர்கள் யார் என்பதை கருணாநிதி மக்களுக்கு விளக்க வேண்டும்.
தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கை மீது முடிவெடுத்து, தீர்வு காண வேண்டியவர் முதல்வர் கருணாநிதிதான்.
ஆனால் அவரே உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கூறுகிறார். இது வெறும் நாடகம்.
இலங்கைப் பிரச்னையிலிருந்து தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்ப அவர் முயல்கிறார் என ராமதாஸ் குற்றம் சாட்டினார்.
தா. பாண்டியன்: இலங்கையில் குண்டு போடுவதை நிறுத்த வேண்டும். தமிழ் மக்கள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டும் என்பதற்காக அறவழியில் நாங்கள் போராடி வருகிறோம். இந்நிலையில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து நாங்கள் நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கலாம் என அரசு கருதினால், எங்கள் முழு பலத்தையும் பயன்படுத்தி அதனை முறியடிப்போம்.
வைகோ: வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதற்கு மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது.
தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தி, கைதாவதில் எங்களுக்கு பிரச்னையில்லை. ஆனால் நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினால், நீதிமன்றத்தில் நடந்தது போலவே, இன்னொரு வன்முறைச் சம்பவத்தை ஏற்படுத்த சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்பதை அறிந்தே, எங்கள் போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளோம்.
வரும் 27-ம் தேதி சென்னை மற்றும் அனைத்து மாவட்ட, வட்டத் தலைநகரங்களில் எங்கள் இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
திருமாவளவன்: நீதிமன்ற வன்முறை சம்பவத்துக்கு சுப்பிரமணியன் சுவாமிதான் முழு பொறுப்பு. அடியாட்களுடன் நீதிமன்றத்துக்கு சென்ற அவர், வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியுள்ளார். அதன் பிறகே வன்முறை வெடித்துள்ளது. எனவே அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நன்றி தினமணி (24.02.2009

Eradication of Tamils from Sri Lanka?

Hon.Vaiko
Dear Sir

Eradication of Tamils from Sri Lanka?Eelam Tamils are losing their lives in hundreds and many hundreds arebeing wounded and maimed due to the indiscriminate shelling and aerialattack on densely populated civilian targets and within security zonedeclared by the same Sinhala government. Within the few weeks of thisyear more than 1700 innocent Tamil civilians lost their lives.The attack is being continued unabated and the mass Tamil genocide istaking place in front of our eyes. The damage is not only to peoplebut to hospitals, schools, sacred temples. The internationalcommunity, especially in India are unaware of the true nature of thesituation and the reasons unfolded into the current turmoil. From thetime the present governance took over the rule of Sri Lanka, the Tamilcommunity was asking for a peaceful settlement, it's only the warmongering Sinhala Government which broke the international truce andstarted the war to eliminate the whole Hindu Tamil civilization fromSri Lanka. The foreign missionaries are looking the issue on theeconomic and political benefit.The government has ordered all international humanitarian agencies andmedia to move out. The dead bodies are left unattended and injuredpeople, unable to move are lying around everywhere. The wounded arefacing death since no hospitals are functional in that area, the SriLankan Defence Secretary himself telling any hospitals functioningoutside nofire zone are legitimate target.The makeshift hospitals inVanni that have been forced to relocate amidst artillery and aerialattacks that followed after Sri Lankan Defence Secretary's statement,struggling to treat the wounded, are operating under the trees andbunkers have been turned to wards to treat the seriously wounded. Asmedical facilities, both within and outside the government announcedsafe-zones have been targeted by the Sri Lankan Forces, some of thepatients at the makeshift hospitals have urged to place them insidethe bunkers. The make shift hospitals are functioning under pressingconditions without medical supplies and with the relentless shelling.Supplies for December 2008 and January 2009 are yet to be allowedinside Vanni by the Sri Lankan military.Nearly 250,000 people have been told by the army to confine themselvesto a stretch of 30 square km. A part of this terrain is marsh andjungle. People have flocked themselves in the remaining patches ofcoconut groves and they stay there without any amenities or food andwith the risk of being attacked even in the 'safety zone'. Even ICRChas informed they cannot take food and medical supplies since theyhaven't got defense clearance.The table below shows the ethnic cleansing index.At the moment of need your whole hearted support to stop the war andtimely assistance with humanitarian aids such as medical supplies willgive a solace to the affected people and give strength for them.We earnestly appeal for your kind hearts to melt for us and SafeguardTamils in Sri LankaKalaivananMore Photos - Please view these photos once for us - Children and softhearted avoid these photos
http://picasaweb.google.com/tamilnational

ஐயா வைகோ அவர்களே !

ஐயா வைகோ அவர்களே

வைகோ - வை என்றால் வையகம்,கோ என்றால் கடவுள் , வையகத்தின் கடவுளே எங்கள் வைகோவே எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஐயா,

"தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்"
ஈழ மக்களின் விடிவுக்கான உங்களின் அர்ப்பணிப்புகள் மற்றும் அன்பும் பாசமும் அக்கறையும் ஈழ தமிழனால் என்றென்றும் வாழ்நாளில் மறக்கமுடியாதவை.

எத்தனை தடைகள் எத்தனை இடர்கள் இருந்தபோதும் ஈழ மக்கள் மீதும் ஈழ மண் மீதும் நீங்கள் காட்டிவரும் ஆழமான அன்பு எங்களுக்கு இடர் தீர்க்க எம் ஐயா வைகோ உள்ளார் என்ற நம்பிக்கை துளியுடன் இந்த மடலை உங்களுக்கு சமர்பிக்கிறேன்.
ஐயா !!!
முன்னூறு தமிழர்கள் மூன்றே மணி நேர இடைவெளியில் தாங்குதற்கு யாருமன்றி சென்று தூக்குதற்கு எவருமன்றி இரத்தம் சிந்தியே மாண்டுவிட்டனர்.ஆயிரத்துக்கு மேலானோர் படுகாயமடைந்து அரவணைக்க யாருமின்றி ஈழ மண்ணை குருதிகளால் அபிஷேகிக்கிறார்கள்.
அப்படியிருந்தும் இன்னும் எறிகணை பல்குழல் பீரங்கிகள் ஓய்ந்தபாடில்லை.காயப்பட்டோரை தூக்குதற்கு யாருமில்லை. ஓயாத மழையால் எம் பதுங்கு குழிகளும் நீர் நிறைந்த கிடங்குகளாய் மாறி கூவி வரும் எறிகணை மழைக்கு எமை அந்தரிக்க விட்டுவிட்டது.
காக்க யாருமற்ற ஏதிலிகளாய் இன்று உங்கள் முன் மண்டியிட்டு நிற்கின்றோம்.
காயமடைந்தவர் அனைவரும் கண்முன்னே மடிய ஓலமிட்டு அங்குமிங்கும் ஓடித் திரிகின்றோம்.
யார் வந்தார் எமை அணைக்க ?யார் வந்தார் எமை பார்க்க?யார் வந்தார் எமை தூக்க ?
தட்டி கேட்க கூட யாரும் வரவில்லையே?
நாம் சபிக்கப்பட்டவர்களா இல்லை சாவதற்கே பிறந்தவரா? நாமும் தமிழராகவே தானே பூமியில் பிறந்தோம்?
சாவு மணி அடித்து அடித்து காதே செவிடாய் போய்விட்டது.மரண படுக்கையில் என் இறுதி ஆசையை கேட்கிறேன் ஐயா! சாக முன் ஒரு முறை விடிவு மணியை கேட்க வேண்டும் நான்.
ஏன் என்று கேட்க யாருமற்று நாதியற்று தெருவோரம் பிணமாய் குவியும் ஈனத்தமிழராய் இன்று உங்கள் முன் ஓலமிடும் எங்களின் குரல்கள் கேட்கவில்லையா?
நாங்கள் நீதி கூட கேட்கவில்லை. உங்களிடம் உயிர் பிச்சை வேண்டி இரந்து பாவிகளாய் உங்கள் முன் மண்டியிட்டு நிற்கின்றோம் ஐயா!
ஸ்ரீலங்கா அரசின் கோரமான இன சுத்திகரிப்பில் ரத்த வெள்ளத்தில் துடிக்கும் ஈழத் தமிழனை இன்று உங்களால் மட்டுமே சாவின் விளிம்பில் இருந்து காக்க முடியும்.
கூவி அழும் எங்கள் இனத்துக்காய் ஓங்கி ஒரு குரல் கொடுக்க மாட்டீர்களா.
காலகாலத்துக்கும் உங்களுக்கு நாம் நன்றி உடையோராய் இருப்போம்.
தருணம் பிந்தினால் மரணம் என்று தமிழன் தவிக்கின்றான். இதற்கு மேலும் சற்றும் தாமதிக்காமல் ஈழ தமிழனின் சுருக்கு கயிறை இன்றே அறுத்தெறியுங்கள் ஐயா.
எம் தமிழ் செயல் வீரனே , எம் தமிழ் உணர்வாளரே எமக்காக ஒரு குரல் எமக்காக ஒரு கரம் எமக்காக ஒரு ஆணை
உங்களிடம் உரிமையுடன் உயிர் பிச்சை கேட்டு நிற்கும்,
அன்புள்ள
சாவின் மடியில் உள்ள ஈழ தமிழன்வன்னியில் இருந்து தொல்காப்பியன்
இத்துடன் எமது தமிழ் உறவுகளின் படங்களை இணைத்துள்ளேன்

மேலும் படங்கள் பார்க்க

http://picasaweb.google.com/tamilnational/TamilGenocidePartIII
http://picasaweb.google.com/tamilnational/TamilGenocidePartII
http://picasaweb.google.com/tamilnational/TamilGenocidePartIV
http://picasaweb.google.com/tamilnational

Sunday, February 22, 2009

திமுக தொண்டர் தீக்குளித்து மரணம் - வைகோ இரங்கல்

ஈழத் தமிழர்களுக்காக உயிர்நீத்த தி.மு.க. தொண்டருக்கு வைகோ வணக்கம்

ஈழத் தமிழர்களுக்காக உயிர்நீத்த திராவிட முன்னேற்ற கழகத் தொண்டர் அமரேசனுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ வணக்கம் செலுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கைத் தீவில் மனித குலத்தின் மனச்சாட்சியை உலுக்குகின்ற கொடிய தமிழினப் படுகொலையை சிங்கள அரசு நடத்துவதால் தாய் தமிழகத்தின் மக்களின் உள்ளம் இரத்தக் கண்ணீர் வடிக்கின்றது.
சொந்த சகோதர, சகோதரிகள் துன்பத்தில் சாவதை எண்ணியும் அதனை தடுப்பதற்கு இந்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத துரோகத்தை குறித்து உள்ளம் துடித்தும், தங்கள் உயிரை எரித்துக் கொண்டாலாவது தமிழர்களைக் காக்க வழி பிறக்காதா? என்ற ஏக்கத்தோடு தமிழ்நாட்டில் முத்துகுமார், பள்ளப்பட்டி ரவி, சீர்காழி ரவிச்சந்திரன், சென்னை அமரேசன், கடலூர் தமிழ்வேந்தன், தீக்குளித்து மடிந்தனர்.
அதே உன்னதமான தியாக உணர்வுடன் தலைநகர் சென்னையில் தி.மு.க.வைச் சார்ந்த சிவப்பிரகாசம் என்ற அண்ணாவின் தம்பி தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்துள்ளார்.
ஈழத் தமிழர்களைக் காக்க தன் உயிரையும், உடலையும் நெருப்புக்கு தாரை வார்த்த அந்த உத்தமரின் தியாகம் பூசிக்கத்தக்கது. வாழ்ந்து போராடுவோம், உயிர்களை அழித்துக் கொள்ளாதீர்கள், தீக்குளிக்காதீர்கள் என்று தமிழர்களை மன்றாடி வேண்டுகிறேன்.
ஈழத் தமிழர்களுக்காக தன் இன்னுயிரைத் தந்த, அந்த உத்தமனின் உடலுக்கு மலர்வணக்கம் செய்ய என் உள்ளமும், கரங்களும் துடித்தாலும்கூட நான் கேள்விப்படும் ஆதாரபூர்வமான செய்திகளால், உன்னதமும் அர்ப்பணிப்பும் நிறைந்த சிவப்பிரகாசத்தின் இறுதி சடங்குகளுக்கு என்னால் சிறு குந்தகமும் ஏற்பட்டது என்ற வீண் பழிச்சொல்லுக்கு இடம் தரவேண்டாம் என்று கருதியே நான் நேரில் சென்று அந்தத் தியாகச் செம்மலுக்கு வணக்கம் செலுத்த இயலவில்லை.
தன் மனைவி - மக்கள், குடும்பத்தினரை, உற்ற தோழர்களை கண்ணீரில் கதற விட்டு நெருப்பில் துடிதுடித்து மாண்ட வீரத்தியாகி சிவப்பிரகாசத்திற்கு வீரவணக்கம் செலுத்துகிறேன்.
துயரத்தில் பரிதவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினருக்கும் என் கண்ணீர் வணக்கத்தினை செலுத்துகின்றேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை கறுப்பு கொடி கண்டனம் - வைகோ

வக்கீல்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் - நாளை கறுப்பு கொடி கண்டனம் சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் வக்கீல்கள் தாக்கப்பட்டதை கண்டித்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நாளை கறுப்பு கொடி கண்டன போராட்டம் நடத்தப்படும் என மதிமுக செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினர், வழக்கறிஞர்கள் மீது நடத்திய அடக்குமுறையைக் கண்டித்து நாளை காலை 10 மணி அளவில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும் - வட்டத் தலைநகரங்களிலும் மாவட்ட ஆட்சியர் - வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்துகிறது.

வழக்கறிஞர்கள் மீது தாக்குதலை நடத்த வேண்டும் என்று பல நாள்களாகவே திட்டமிட்டு வந்துள்ளனர். குறிப்பிட்ட 19-ஆம் தேதி அன்று இந்தத் தாக்குதலை நடத்த வேண்டுமென்று திட்டமிட்டதால் கறுப்புப் பேண்ட்டும், வெள்ளைச் சட்டையும் போட்ட வன்முறைக் கும்பலை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.

சாக்கு மூட்டையில் கற்களைக் கொண்டு வந்துள்ளனர். உயர் நீதிமன்றத்தில் இந்தக் கற்கள் கிடையாது. காவல்துறையின் தலைமை ஆணையர் பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தால் கண்டதும் சுடுவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறியுள்ளார்.
பொதுச் சொத்துக்களை நாசம் செய்தால் அதற்குச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்; வழக்கு போடலாம். ஆனால், கண்டவுடன் துப்பாக்கியால் சுடுவோம் என்று காவல்துறை ஆணையர் கூறுவது சர்வாதிகாரம் ஆகும்.

வழக்கறிஞர்களை தாக்கிய காவல்துறையினர், உயர் அதிகாரிகள் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். உண்மையை அறிவதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

வழக்கறிஞர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்தும், வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் நாளை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தமிழகம் முழுவதும் நடத்துகின்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் தொண்டர்களும், தமிழ் உணர்வாளர்களும் பெருமளவில் கருப்புக் கொடியுடன் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் வைகோ.

Followers

About Me

My photo
முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.