ஐயா வைகோ அவர்களே
வைகோ - வை என்றால் வையகம்,கோ என்றால் கடவுள் , வையகத்தின் கடவுளே எங்கள் வைகோவே எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஐயா,
"தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்"
ஈழ மக்களின் விடிவுக்கான உங்களின் அர்ப்பணிப்புகள் மற்றும் அன்பும் பாசமும் அக்கறையும் ஈழ தமிழனால் என்றென்றும் வாழ்நாளில் மறக்கமுடியாதவை.
எத்தனை தடைகள் எத்தனை இடர்கள் இருந்தபோதும் ஈழ மக்கள் மீதும் ஈழ மண் மீதும் நீங்கள் காட்டிவரும் ஆழமான அன்பு எங்களுக்கு இடர் தீர்க்க எம் ஐயா வைகோ உள்ளார் என்ற நம்பிக்கை துளியுடன் இந்த மடலை உங்களுக்கு சமர்பிக்கிறேன்.
ஐயா !!!
முன்னூறு தமிழர்கள் மூன்றே மணி நேர இடைவெளியில் தாங்குதற்கு யாருமன்றி சென்று தூக்குதற்கு எவருமன்றி இரத்தம் சிந்தியே மாண்டுவிட்டனர்.ஆயிரத்துக்கு மேலானோர் படுகாயமடைந்து அரவணைக்க யாருமின்றி ஈழ மண்ணை குருதிகளால் அபிஷேகிக்கிறார்கள்.
அப்படியிருந்தும் இன்னும் எறிகணை பல்குழல் பீரங்கிகள் ஓய்ந்தபாடில்லை.காயப்பட்டோரை தூக்குதற்கு யாருமில்லை. ஓயாத மழையால் எம் பதுங்கு குழிகளும் நீர் நிறைந்த கிடங்குகளாய் மாறி கூவி வரும் எறிகணை மழைக்கு எமை அந்தரிக்க விட்டுவிட்டது.
காக்க யாருமற்ற ஏதிலிகளாய் இன்று உங்கள் முன் மண்டியிட்டு நிற்கின்றோம்.
காயமடைந்தவர் அனைவரும் கண்முன்னே மடிய ஓலமிட்டு அங்குமிங்கும் ஓடித் திரிகின்றோம்.
யார் வந்தார் எமை அணைக்க ?யார் வந்தார் எமை பார்க்க?யார் வந்தார் எமை தூக்க ?
தட்டி கேட்க கூட யாரும் வரவில்லையே?
நாம் சபிக்கப்பட்டவர்களா இல்லை சாவதற்கே பிறந்தவரா? நாமும் தமிழராகவே தானே பூமியில் பிறந்தோம்?
சாவு மணி அடித்து அடித்து காதே செவிடாய் போய்விட்டது.மரண படுக்கையில் என் இறுதி ஆசையை கேட்கிறேன் ஐயா! சாக முன் ஒரு முறை விடிவு மணியை கேட்க வேண்டும் நான்.
ஏன் என்று கேட்க யாருமற்று நாதியற்று தெருவோரம் பிணமாய் குவியும் ஈனத்தமிழராய் இன்று உங்கள் முன் ஓலமிடும் எங்களின் குரல்கள் கேட்கவில்லையா?
நாங்கள் நீதி கூட கேட்கவில்லை. உங்களிடம் உயிர் பிச்சை வேண்டி இரந்து பாவிகளாய் உங்கள் முன் மண்டியிட்டு நிற்கின்றோம் ஐயா!
ஸ்ரீலங்கா அரசின் கோரமான இன சுத்திகரிப்பில் ரத்த வெள்ளத்தில் துடிக்கும் ஈழத் தமிழனை இன்று உங்களால் மட்டுமே சாவின் விளிம்பில் இருந்து காக்க முடியும்.
கூவி அழும் எங்கள் இனத்துக்காய் ஓங்கி ஒரு குரல் கொடுக்க மாட்டீர்களா.
காலகாலத்துக்கும் உங்களுக்கு நாம் நன்றி உடையோராய் இருப்போம்.
தருணம் பிந்தினால் மரணம் என்று தமிழன் தவிக்கின்றான். இதற்கு மேலும் சற்றும் தாமதிக்காமல் ஈழ தமிழனின் சுருக்கு கயிறை இன்றே அறுத்தெறியுங்கள் ஐயா.
எம் தமிழ் செயல் வீரனே , எம் தமிழ் உணர்வாளரே எமக்காக ஒரு குரல் எமக்காக ஒரு கரம் எமக்காக ஒரு ஆணை
உங்களிடம் உரிமையுடன் உயிர் பிச்சை கேட்டு நிற்கும்,
அன்புள்ள
சாவின் மடியில் உள்ள ஈழ தமிழன்வன்னியில் இருந்து தொல்காப்பியன்
இத்துடன் எமது தமிழ் உறவுகளின் படங்களை இணைத்துள்ளேன்
மேலும் படங்கள் பார்க்க
http://picasaweb.google.com/tamilnational/TamilGenocidePartIII
http://picasaweb.google.com/tamilnational/TamilGenocidePartII
http://picasaweb.google.com/tamilnational/TamilGenocidePartIV
http://picasaweb.google.com/tamilnational
ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com
Tuesday, February 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
Followers
News Archive
-
▼
09
(129)
-
▼
Feb
(12)
- ஈழத்தமிழருக்காக
- தீக்குளித்த வாலிபர்-கண்ணீர் விட்டு அழுத வைகோ
- முகர்ஜிக்கு எதிராக கருப்புக் கொடி-துடைப்பம் போராட்...
- உலகத் தலைவர்களுக்கான கோரிக்கை படிவங்களில் கையெழுத்...
- தீக்குளிப்புகள் வேண்டாம்- உலுக்குகின்றன: வைகோ
- புலிகளை ஒழித்துக்கட்டுவோம் என்று கூறும் ராஜபக்சவின...
- புலிகள் மக்களை வெளிவிடாமல் கேடயமாக வைத்துள்ளார்கள்...
- உண்மையை மறைப்பதற்காக முதல்வர் உண்ணாவிரத நாடகத்தை ந...
- Eradication of Tamils from Sri Lanka?
- ஐயா வைகோ அவர்களே !
- திமுக தொண்டர் தீக்குளித்து மரணம் - வைகோ இரங்கல்
- நாளை கறுப்பு கொடி கண்டனம் - வைகோ
-
▼
Feb
(12)
About Me
- www.mdmkonline.com
- முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.