இலங்கையில் தாய்மார்கள், குழந்தைகள் அழிக்கப்படும் நிலையில் அவர்களுக்கு அரணாக போராடும் விடுதலைப்புலிகளை ஒழித்துக்கட்டுவோம் என்று கூறும் ராஜபக்சேவின் நாக்கை அறுக்க முடியாதா? என்று நாங்கள் துடித்துக்கொண்டு இருக்கிறோம். என்று மதிமுக பொது செயலாளர் வைகோ என தெரிவித்தார்
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படக்கோரியும், சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் மதுரையில் வக்கீல்கள் தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக உண்ணாவிரதம் இருந்த வக்கீல்களை தமிழர் தேசிய பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், மதிமுக பொது செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் உட்பட பலர் வாழ்த்தி பேசினர். மாலை 5 மணி அளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். இதில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ பேசும்போது, ’’தமிழீழ மக்களின் துன்பத்தை தவிர்க்க உறக்கத்தில் இருக்கும் தாய் தமிழகம் விழிக்காதா என்று நினைத்த நேரத்தில் தொப்புள்கொடி உறவினரான சகோதரர்களை பாதுகாக்க, வக்கீல்கள் போராட்டத்தில் குதித்திருப்பது பாராட்டுக்குரியது. எந்த போராட்டம் என்றாலும் கந்தகம் என்னும் தீப்பொறி களம் பதிக்க வேண்டும். அதுபோல தீக்குளித்து இறந்த முத்துக்குமார் என்னும் கந்தகம் மூட்டிய தீயை இனி யாராலும் அணைக்க முடியாது. அது இன்று ஐ.நா.சபையிலும் எரிகிறது. இலங்கை தமிழர்களுக்காக 4 மாதங்களாக போராட்டம் நடக்கிறது. தமிழகத்தில் இருந்து கொண்டு இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் சுப்பிரமணியசாமி மீது யாரும் தாக்குதல் நடத்தவில்லை. தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க முட்டைகளை வீசி உள்ளனர். தேனி மாவட்டத்தில் 400 அடி பள்ளத்தில் விழுந்த சிறுவன் உயிர்பிழைக்க மாட்டானா என்று அவனது தாயார் போல நாமும் எப்படி ஏங்கினோம். அதேபோல இலங்கையில் தாய்மார்கள், குழந்தைகள் அழிக்கப்படும் நிலையில் அவர்களுக்கு அரணாக போராடும் விடுதலைப்புலிகளை ஒழித்துக்கட்டுவோம் என்று கூறும் ராஜபக்சவின் நாக்கை அறுக்க முடியாதா என்று நாங்கள் துடித்துக்கொண்டு இருக்கிறோம். சென்னை உயர்நீதிமன்றில் கற்களே இருக்காது. பொலிஸாரே திட்டமிட்டு மூட்டை, மூட்டையாக கற்களை கொண்டு வந்து வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். தற்காப்புக்காக வக்கீல்களும் தாக்குதலில் ஈடுபட்டதில் தவறில்லை. வக்கீல்களின் அறவழி போராட்டம் தொடர வேண்டும். அதற்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். என்றார்.
ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com
Tuesday, February 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
Followers
News Archive
-
▼
09
(129)
-
▼
Feb
(12)
- ஈழத்தமிழருக்காக
- தீக்குளித்த வாலிபர்-கண்ணீர் விட்டு அழுத வைகோ
- முகர்ஜிக்கு எதிராக கருப்புக் கொடி-துடைப்பம் போராட்...
- உலகத் தலைவர்களுக்கான கோரிக்கை படிவங்களில் கையெழுத்...
- தீக்குளிப்புகள் வேண்டாம்- உலுக்குகின்றன: வைகோ
- புலிகளை ஒழித்துக்கட்டுவோம் என்று கூறும் ராஜபக்சவின...
- புலிகள் மக்களை வெளிவிடாமல் கேடயமாக வைத்துள்ளார்கள்...
- உண்மையை மறைப்பதற்காக முதல்வர் உண்ணாவிரத நாடகத்தை ந...
- Eradication of Tamils from Sri Lanka?
- ஐயா வைகோ அவர்களே !
- திமுக தொண்டர் தீக்குளித்து மரணம் - வைகோ இரங்கல்
- நாளை கறுப்பு கொடி கண்டனம் - வைகோ
-
▼
Feb
(12)
About Me
- www.mdmkonline.com
- முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.