ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com

Saturday, February 28, 2009

ஈழத்தமிழருக்காக

ஈழத்தமிழருக்காக தீக்குளித்த என் கணவர் தியாகிக்கு பணம் வேண்டாம் - அம்மு ஈழத்தமிழருக்காக தீக்குளித்த என் கணவர் தியாகத்திற்கு பணம் எதுவும் வேண்டாம் என மனைவி அம்மு தெரிவித்துள்ளார். நேற்று இரவு 10 மணியளவில் தேமுதிகவின் தீவிர தொண்டரான வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம். இவரது மகன் 36 அகவையுடைய சீனிவாசன் இலங்கை தமிழர்களுக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மேலும் ஏதாவது செய்ய வேண்டும், அப்பாவி தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும், என்று கூறிக்கொண்டே வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். உடல் முழுவதும் வெந்த நிலையில் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக அவரை வேலூர் அரசு வைத்தியசாலைக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் மாற்றப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சீனிவாசனின் உடல் நலம் குறித்து பார்த்தும் விசாரிப்பதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்ற போது சீனிவாசனின் மருத்துவசெலவுக்காக 10ஆயிரம் கொடுத்தார். அப்போது அவரின் மனைவி அம்மு இக்கருத்தைத் தெரிவித்து பணம் வேண்ட மறுத்துவிட்டார்.

சீனிவாசன் ஒரு பிள்ளையின் தந்தையாவார். எனினும் வைகோ பிடிவாதமாக இது மருத்துவசெலவுக்காகத்தான். இதை வாங்கிக்கொள்வதில் ஒன்றும் தப்பில்லை என்று கூறி பணத்தை கொடுத்தார்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Followers

About Me

My photo
முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.