திருநெல்வேலி:
இலங்கையில் ஹிட்லர் காலத்தை விடவும் கூடுதலான கொடுமைகள் நடந்து வருகின்றன என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாளையங்கோட்டை சிறை வாசலில் தெரிவித்தார்.
பிரணாப் முகர்ஜிக்கு நேற்று கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை நடத்திய வைகோ உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.இன்று காலையில் அவர்கள் அனைவரும் பாளையங்கோட்டை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
சிறைச்சாலையில் அடைக்கப்படுவதற்கு முன்பு சிறை வாசலில் செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில், இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இலங்கை அரசு ஒரு இனத்தையே அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.தமிழ் தாய்மார்களுக்கு கருகலைப்பு நடத்தி சிசுக்களை தெருவில் வீசி வருகின்றனர்.
சர்வதேச செஞ்சிலுவை சங்கம் 90 சிசுக்களை கண்டெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஹிட்லர் காலத்தை விட கூடுதல் கொடுமைகள் இலங்கையில் தற்போது நடக்கிறது. இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய இந்தியா வலியுறுத்த தயங்குவதால் மற்ற நாடுகளும் யோசிக்கின்றன.
ராணுவ அமைச்சராக பிரணாப் முகர்ஜி இருந்தபோது இலங்கைக்கு அதிக ஆயுத சப்ளை செய்யப்பட்டது. அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே நாங்கள் தூத்துக்குடியில் கருப்பு கொடி காட்டினோம்.
நேரு காலத்தில் இருநது கருப்பு கொடி போராட்டம் இருந்து வருகிறது என்றார் அவர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.