ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com

Tuesday, March 31, 2009

ராமேஸ்வரம் வந்த 14 தமிழ் அகதிகள்

ராமேஸ்வரம்: இலங்கையில் நிலவும் போர் சூழலில் இருந்து உயிர் பிழைக்கும் நோக்கத்தில் இன்று காலை 14 அகதிகள் தனுஷ்கோடி அருகே உள்ள கடற்கரை பகுதிக்கு வந்தனர்.இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடும் விடுதலை புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் கடும் போர் நடந்து வருகிறது. இதில் அப்பாவி தமிழர்கள் தினமும் 100 கணக்கில் பலியாகி வருகின்றனர்.

இலங்கை ராணுவம் விடுதலை புலிகளை அழிக்கிறேன் என்ற பெயரில் பாதுகாப்பு பகுதியில் இருக்கும் மருத்துவமனைகளிலும் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகிறது.இதையடுத்து உயிருக்கு பயந்தநிலையில் இலங்கை தமிழர்கள் சொந்த வீட்டை, இடத்தை, நிலத்தை துறந்து தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வருகின்றனர்.இந்நிலையில் இன்று இலங்கை த‌மிழ‌ர்க‌ள் 14 பே‌ர் தனு‌‌‌ஷ்கோடி அருகே உ‌ள்ள ஊ‌த்த‌ப்ப‌ட்டி கட‌ற்கரை‌க்கு தப்பி வ‌ந்தனர்.அவ‌ர்க‌ளிட‌ம் ம‌த்‌திய, மா‌நில உளவு‌த்துறை அ‌திகா‌ரிக‌ள் ‌‌தீ‌விர விசாரணை‌ நட‌த்‌தின‌ர்.

விசாரணைக்கு பி‌ன்பு அவ‌ர்க‌ள் ம‌ண்டப‌ம் அ‌க‌தி‌க‌ள் முகாமு‌க்கு அனு‌ப்‌பி வை‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.அவர்கள் ம‌ன்னா‌ர் மற்றும் வ‌வு‌னியாவில் வந்துள்ளதாக கூறியுள்ளனர்.

பின்னூட்டம் :
திரை கடல் ஓடி திரவியம்
தேடினான் அன்று தமிழன்.
அலை கடல் மோதி வந்து அகதி ஆகின்றான் இன்று
தமிழன்.எல்லாளன்,சங்கிலியன் ஆண்டமண்எல்லாமே
தமிழ்இரத்தத்தில் மிதக்குது.
எங்களை காத்திட தொப்பிள்கொடிஎங்கள் தாயும் வரவில்லையே.
நாங்கள் என்ன நாடற்றவர்களா நாங்கள் என்ன நாதியற்றவர்களா.
இருந்தோம் நம்பியிருந்தோம் இன்றுவரை நம்புகின்றோம்.
என்றுவரை நம்புவது எனிமேலும் நம்புவதா.
தமிழினமே தமிழினமேதவிக்கின்றோம் தவிக்கின்றோம்.
தமிழனாய் பிறந்தது குற்றமா
தமிழ் ஈழத்தில் பிறந்தது குற்றமா.
ஓயோம் .

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Followers

News Archive

About Me

My photo
முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.