ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com

Tuesday, March 10, 2009

கச்சத்தீவு செல்ல தடை: மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்

கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் கோவில் திருவிழாவில் தமிழக கிறிஸ்தவர்கள் பங்கேற்க இலங்கை அரசு தடை வி௦தித்திருப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

கச்சத்தீவில் உள்ள அந்தோணியர் கோவிலில் ஆண்டுதோறும், மார்ச் மாதம் திருவிழா நடைபெறும். இதில் இராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் பங்கேற்பது வழக்கம்.கச்சத்தீவு உடன்படிக்கையில் இந்த திருவிழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்பதற்கான உரிமை இருக்கிறது.

இந்நிலையில், தமிழகத்தில் இருந்து 50 பேர் மட்டுமே கச்சத்தீவுக்கு செல்ல முடியும் என்று இலங்கை அரசு திடீர் கட்டுப்பாடு விதித்துள்ளது. இது, அப்பகுதி கிறிஸ்துவ மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளதால் கச்சத்தீவுக்கே செல்வதில்லை என அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தினமும் பாதிக்கப்படும் சூழ்நிலையில், தங்களது குறைகளை சொல்லி ஜெபிக்கக்கூட இலங்கை அரசு அனுமதி தர மறுப்பது கடும் கண்டனத்துக்குரியது.

இந்த சிக்கல் பற்றி பேசாமல் இருப்பதன் மூலம், முதல்வர் கருணாநிதி இந்த பிரச்சனையில் கடமை தவறிவிட்டார் என்று குற்றம் சாட்டுகிறேன். கிறிஸ்தவ மக்களின் கச்சத்தீவு உரிமையை நிலைநாட்டும் வகையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Followers

News Archive

About Me

My photo
முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.