ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com

Saturday, March 14, 2009

மருந்துகள் ஈழத்தமிழர்களுக்காக அனுப்பவில்லை; இலங்கை இராணுவத்துக்கே அனுப்பப்படுகின்றன: வைகோ

தமிழக தேர்தலுக்காக மக்களை ஏமாற்றுவதற்காக மருந்துகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. ஆனால் இந்த மருந்துப் பொருட்கள் ஈழத்தமிழர்களுக்காக அனுப்பப்படவில்லை. இலங்கை இராணுவத்துக்கே அனுப்பப்படுகின்றன என்று வைகோ குற்றஞ் சாட்டியுள்ளார்.
இன்று ஸ்ரீபெரும்புதூர் ம.தி. மு.க. ஒன்றிய செயலாளர் துரை பாலாஜி இல்ல திருமண விழாவில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:-

இலங்கை இராணுவம் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் ஈழத்தமிழர்களை மொத்தமாக ஓரிடத்தில் அடைத்து பெண்களின் கற்பை சூறையாடி, கொலை செய்தும் இளைஞர்களை கொடூரமாக சுட்டு வீழ்த்தியும் வருகிறது.

இதற்கு முழுக்க இந்திய அரசு துணை நிற்கிறது. உலக நாடுகளும் ஐநாசபையும் இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று சொல்லி வருகிறது. ஆனால் இந்திய அரசு இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று இன்று வரை வலியுறுத்தவில்லை. ஏன் என்றால் இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக போர் செய்வது இந்திய அரசுதான். தமிழக தேர்தலுக்காக மக்களை ஏமாற்றுவதற்காக மருந்துகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. ஆனால் இந்த மருந்துகளை ஈழத்தமிழர்களுக்காக அனுப்பவில்லை.


இலங்கை இராணுவத்துக்காகவே அனுப்பப்படுகிறது. இதுவரை நடந்த தேர்தலில் ஈழத்தமிழர்கள் பிரச்சினையை பற்றி நாங்கள் பேசியது இல்லை.ஆனால் இந்த தேர்தலில் ஈழத்தமிழர்கள் பிரச்சினை பற்றி பேசுவோம். கருணாநிதி கடந்த 3 வருடங்களாக அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க.வை பிரிக்க பல வழிகளில் சதி செய்து வருகிறார். இதன் பலனாக நாஞ்சில் சம்பத் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு, கண்ணப்பன் கட்சி மாற்றம் நடைபெற்றது. கண்ணப்பன் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை.அவர் எங்கிருந்தாலும் வாழ்க.அ.தி.மு.க.வில் இருந்து ம.தி.மு.வை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. வரும் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும். இவ்வாறு வைகோ கூறினார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Followers

News Archive

About Me

My photo
முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.