தூத்துக்குடி: இந்தியாவுக்குத் தெரியாமல், சீனாவிடம் இலங்கை ஆயுதங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறது என்று இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தூத்துக்குடியில் நேற்று இரவு பொதுகூட்டம் நடந்தது. இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஓருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை வகித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், தற்போது இலங்கை அரசுக்கு இந்தியா கொடுத்துள்ள ஆயுதங்களால் தான் இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவுக்கு தெரியாமல் இலங்கை அரசு சீனாவிடமும், பாகிஸ்தானிலும் ஆயுதங்களை வாங்கி குவித்து வருகிறது. புலிகள் மீது உள்ள ஆத்திரம் டில்லியில் உள்ளவர்கள் மதியை இது மறைக்கின்றது.
புலிகள் இந்தியாவிற்கு எதிரான எந்த ஒரு நாட்டிடமும் இருந்து ஆயுதங்கள் வாங்கியது இல்லை. 10 கோடி உலக தமிழர்களும், இலங்கை தமிழர்களுக்கும், விடுதலை புலிகளுக்கும் அரணாக இருப்பார்கள் என்றார்.
வக்கீல்களுக்கு ராமதாஸ் பாராட்டு
பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், இலங்கை பிரச்சனைக்காக வக்கீல்கள் போராடி வருவது பாராட்டுக்குரியது.
தூத்துக்குடியில் பாமக மாநில பொது செயலாளர் உச்சல்சிங் வீ்ட்டிற்கு நேற்று முன்தினம் இரவு சென்ற போலீசார் அங்கு அந்துமீறி நுழைந்து சோதனை போட்டுள்ளனர். ஏன், எதற்கு என்று கேட்டபோது இங்கு பயங்கரவாதிகள் உள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு சோதனையிட உத்தரவிட்டது யார், காவல்துறையினர் இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என எச்சரிக்கிறேன் என்றார்.
பெருமைக்குரிய தமிழினம் - வைகோ
கூட்டத்தில் வைகோ பேசுகையில், சிங்கள ராணுவத்துக்கு பல நாட்டு ஆயுத பலம் உள்ளது. இலங்கை ராணுவ முகாம்கள் பல தமிழர்களை சித்திரவதை செய்யும் கூடங்களாக செயல்பட்டு வருகின்றன.
நாங்கள் பேசுவதை உளவு சொல்லும் போலீசாரும் தமிழர்கள். நேதாஜி, நான் மீண்டும் பிறந்தால் தமிழனாக பிறக்க வேண்டும் என்று கூறிய பெருமைக்குரிய இனம் தமிழினம் என்றார்.
இந்திய நிலையில் மாற்றம் - ராமதாஸ் வரவேற்பு
முன்னதாக நேற்று காலை தூத்துக்குடிக்கு வந்த டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இலங்கையில் நடப்பது இன அழிப்பு போர் என்பதை உலக நாடுகள் ஒப்புக் கொண்டு உள்ளன. ஆனால் இந்தியா மட்டும் தயக்கம் காட்டி வருகிறது.
தற்போது இந்தியா கொஞ்சம் தயக்கத்தை கைவிட்டு போர் நிறுத்தம் பற்றி பேசத்தொடங்கி உள்ளது. இது வரவேற்கத்தக்க மாற்றம் ஆகும். இந்த மாற்றம் பேச்சளவில் நின்றுவிடாமல் செயல் அளவில் இருக்க வேண்டும்.
இலங்கை அரசு போரை நிறுத்தா விட்டால் இந்தியா அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும். உடனடியாக முல்லைத்தீவுக்கு உணவை அனுப்ப வேண்டும். விமானம் மூலம் தினமும் உணவு போட வேண்டும்.
போர் நிறுத்தத்துக்கு இலங்கை அரசு முன்வராத நிலையில் சர்வதேச அளவில் இலங்கையை ஒரு குற்றவாளி நாடாக நிறுத்த இந்தியா முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப்பட்டு உள்ளனர். இது கண்டனத்துக்கு உரியது. அதே நேரத்தில் இந்தியா செல்லவில்லை என்பதற்காக, இலங்கை தனது விளையாட்டு வீரர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியது. இந்த தாக்குதல் நடந்த உடன் வெளியுறவுத்துறை மந்திரி எதிர்க்கட்சி தலைவர் அத்வானியை சந்தித்து பேசுகிறார். அறிக்கைகள் வெளியிடுகின்றனர்.
ஆனால் இலங்கையில் மனித படுகொலை நடந்து வருகிறது. இது குறித்து இந்தியா கவலைப்பட்டதாக தெரியவில்லை. இந்தியா இதுவரை கவலையை மட்டும் தெரிவித்து உள்ளது. இதுவரை மத்தியில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படவில்லை.
இப்போதும் காலம் கடந்து விடவில்லை. மத்திய உள்துறை மந்திரி சிதம்பரம், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள தமிழகத்தை சேர்ந்த தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ், போன்ற கட்சிகள், பா.ஜனதா, இடதுசாரிகள் மற்றும் வடஇந்திய கட்சிகள் இணைந்த ஒரு கூட்டத்தை கூட்ட வேண்டும்.
தமிழக முதல்-அமைச்சர் தலைமையில் பிரதமரிடம் கொடுத்த மனுவில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றார்.
லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு 2 நாட்களில் தெரியும் என்றும், அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் ராஜா கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு அது அவரது விருப்பம் என்றும் ராமதாஸ் பதிலளித்தார்
ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com
Wednesday, March 4, 2009
Subscribe to:
Post Comments (Atom)
Followers
News Archive
-
▼
09
(129)
-
▼
Mar
(103)
- ஈழத் தமிழர் மீது ராஜபக்ச அரசு மிகப்பெரிய தாக்குதல்...
- இந்தியா நடத்தும் ஈழபோரில் இதுவரை ஐயாயிரம் தமிழ் உய...
- ராமேஸ்வரம் வந்த 14 தமிழ் அகதிகள்
- தனி தமிழீழத்தை ஆதரிப்பவர்களுடன் இலட்சிய தி.மு.க. க...
- தமிழர்கள்பேரில் பிச்சை எடுக்கும் ராஜபக்சேக்கள்.வீர...
- விடுதலைப் புலிகளின் அனைத்துலக பிரதிநிதியுடன் ஹோல்ம...
- ஈழத்தில் இந்தியா நடத்தும் போர்.தேவையில்லாமல் இந்தி...
- குறுக்கு விசாரணைக் கூண்டில் சிபிஎம் - ஈழத் தமிழர்க...
- காங்கிரஸுக்கு மருத்துவர் ராமதாஸ் தந்த மரண அடி: சகே...
- தொடரும் திருமாவின் துரோக செயல்கள்
- விடுதலை சிறுத்தைகளின் துரோகம் - சாயம் வெளுக்கிறது.
- இநதியாவின் காங்கிரஸ் அரசாங்கத்தின் மன்னிக்கமுடியா...
- இலங்கைத் தமிழர்களையும், அவர்களது நலன்களையும் கைகழு...
- 5 ஆயிரம் இந்திய இராணுவத்தினர் கப்பலில் இலங்கை பயணம...
- ஈழத்தமிழருக்காக மேலும் ஒரு தேமுதிக பிரமுகர் தீக்கு...
- சென்னையில் இன்று கண்டன ஆர்பாட்டம்
- தமிழின கொலை பட்டியல்
- விடுதலைப்புலிகள் புதிய வகை ஆயுதங்களால் தாக்குகின்ற...
- கிழக்கில் கைப்பற்றிய பிரதேசங்களில் சிறிலங்கா அரசு ...
- தமிழ்நாட்டின் அரசியல் துரோகிகள் - அடையாளம் காண்பீர...
- உலகில் எங்கும் நடக்காத கொடூரம் தமிழர் தாயகத்தில் ...
- இந்தியாவின் தவறான அணுகுமுறை மற்றும் நடத்தைகள் -அமெ...
- வடபகுதியில் ஏற்பட்டுள்ள நிலை மிகவும் அபாயகரமானது: ...
- தமிழனின் இரத்தத்தை கொதிக்க வைக்கும் அறிக்கை - திம...
- போலிசின் போலித்தனம் - தமிழ் உணர்வாளர்கள் மறியல்
- ராஜபக்ஸ அரசுக்கு மத்திய அரசு ஆயுதம் வழங்கி, ஜனநாயக...
- கருணாநிதியின் அடுத்த துரோக நடவடிக்கை
- இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த விடுதலை சிறுத்தை...
- பிரபாகரனை அழிக்க நினைத்தால் கடும் விளைவு-வைகோ
- கொளத்தூர் மணி , சீமான் , நாஞ்சில் சம்பத் கைதைக்கண்...
- இலங்கை-பாமக-வி.சி. தொண்டர்கள் தீக்குளிப்பு
- பத்திரிக்கையாளர் பயங்கரவாதியானார் - இலங்கை அரசாங்க...
- போர் குற்றங்கள் புரியும் சிங்கள அரசாங்கம் - ஐ நா
- ஈழத்தின் விசயமாக அனைத்து செய்திகளும்
- இலங்கை தமிழர்களுக்காக தமிழகத்தில் வாலிபர் ஒருவர் த...
- மருந்துகள் ஈழத்தமிழர்களுக்காக அனுப்பவில்லை; இலங்கை...
- இலங்கை இராணுவம் பிடித்து வைத்துள்ள இடங்களில் புலிக...
- மீண்டும் செய்திகள் இங்கே !
- வன்னியில் சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குத...
- ஈழ விடுதலைப் போராட்டம் - வட்டமிடும் வல்லூறுகள்
- கச்சத்தீவு செல்ல தடை: மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்
- இந்தியனாக இருக்க வைகோ தகுதியற்றவர்-தங்கபாலு
- சிறிலங்காவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் - வைகோ
- புதுச்சேரி பிரெஞ்சு தூதரகத்தில் வைகோ-நெடுமாறன் மனு
- தூ... மானங்கெட்ட காங்கிரஸ்காரங்களே...
- புதுக்குடியிருப்பு இராணுவம் முற்றுகை வலயம் உடைக்கப...
- போர் நிறுத்தத்தை இந்தியா வலியுறுத்தினால் 100 நாடுக...
- தமிழீழ ஆதரவு பயணம் நிறைவு-சேலத்தில் மாநாடு
- ஈழத் தமிழர்களின் போராட்டத்துக்கு அ.தி.மு.க. அதரவு:...
- தளராது போராளிகளுக்கு ஊக்கம் கொடுப்போம் உறுதியுடன் ...
- வைகோ அறிக்கை
- உணர்ச்சிக் குரல் எழும்பும்வரை இதயம் துடிக்கும்: ஒர...
- தமிழக மக்களை ஏமாற்றி வாக்குகள் பெறவே இலங்கைக்கு இந...
- உலக நாடுகள் கைவிட்ட எங்களை நீங்களாவது காப்பாற்றுங்...
- ஒரே நாளில் உலகத் தமிழர்கள் உண்ணாவிரதம் இருப்பார்களா?
- கலைஞரே ...இனிமேல் நீங்கள் போடுவது எல்லாமே தப்பு...
- இராஜீவ்- கொலை அல்ல, தண்டனை
- இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் அரசு தோற்றுவ...
- புதுக்குடியிருப்பில் நான்கு டிவிசன் சிறிலங்கா படைய...
- இலங்கை தமிழர்களைக் பாதுகாக்க கோரி சென்னையில் 6 பார...
- உள்நாட்டு போரை அனைத்துலகத்தின் கவனத்திற்கு கொண்டு ...
- வன்னியில் நேற்று நடந்த தாக்குதலில் 32 தமிழர்கள் பலி
- சிறிலங்கா அரசின் தமிழினப் படுகொலையின் கோரகாட்சிகள்
- இலங்கையை அதிர வைத்துள்ள பிரபாகரன் மகனும், விகடன் க...
- உலகத் தலைவர்களுக்கான கோரிக்கை படிவங்களில் கையெழுத்...
- இந்தியா பேரினவாதத்தின் ராஜாவா? - டி.அருள் எழிலன்.
- சிறுமி மீது பாலியல் வல்லூறவில் ஈடுபட்டவர் வெல்லாவெ...
- பெண்கள் அனைவரும் படையினருக்கு விருந்தாகட்டும்: ஆண்...
- சிறிலங்கா மேற்கொண்டுள்ள தமிழினப் படுகொலையின் காட...
- பிரபாகரனையும், விடுதலைப்புலிகளையும் பற்றி பாரதியார...
- வன்னியில் ராணுவ வெறி தொடருகிறது - 83 தமிழர்கள் படு...
- Sri Lanka: Ban deplores rising civilian death toll...
- ஈழத்தில் நடப்பது என்ன?’... வைகோ எழுச்சி உரை
- வைகோ உரை இந்திய - இலங்கைத் தமிழ்ச்சங்கங்களின் கூட்...
- 'ஆனந்த விகடன்' வார இதழை விற்பனை செய்த பிரபல புத்தக...
- தனி ஈழம் மட்டுமே சரியான தீர்வு - நாஞ்சில் சம்பத்
- யாரையும் மிரட்டலை-கருணாநிதிக்கு குப்தா பதில்
- Stop Sri Lanka’s bloody civil war:Andrew Dismore MP
- தணலில் தகிக்கும் தமிழகம் - தணிக்கப் பார்க்கும் முத...
- ராஜீவ் கொலையில் சுப்பிரமணியசாமி தொடர்பு - பெரியார்...
- ஈழத்தில் நம் சொந்தங்கள்
- ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தீக்குளித்த விடுதலைச் சி...
- ஈழத்தில் நம் சொந்தங்கள்..
- மருத்துவமனையில் பயங்கர தாக்குதல் - 37 தமிழர்கள் பட...
- கிளிநொச்சியில் மேலும் ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்க...
- இந்தியாவுக்கு தெரியாமல் சீனாவிடம் ஆயுதம் வாங்கும் ...
- மத்தியில் காங்கிரஸ் கூட்டணி தோற்கும்: வைகோ
- தமிழின அழிப்புக்கு அமெரிக்கா துணை போகக்கூடாது: அமெ...
- ஈழத் தமிழர்களை காப்பாற்றுங்கள்: சென்னையில் பிரித்த...
- மட்டக்களப்பில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்...
- பட்டினிக் கொடுமை; மருந்துப் பஞ்சம்: தமிழரை உயிர்ப...
- பூச்சாண்டிக்கு பயப்பட மாட்டேன்- சிறையிலிருந்து பிர...
- Vaiko feels proud of his photos with LTTE chief
- ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த விஜயகாந்த் கட்சியி...
- ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசின் அனைத்து து...
- பிரபாகரன்-வைகோ 'தொடர்பு'!!: 'படம்' காட்டும் இலங்கை...
- வைகோவுக்கு ஜாமீன்-இன்று விடுதலை
- தமிழர்களை வெளியேற்றுவது வரலாற்று தவறு-பா.பா.நடேசன்
- இனத்திற்கொரு நீதி சொல்லும் இறையாண்மை இரா.செந்தில்க...
- மட்டக்களப்பில் தாயின் முன்னே மகள் பாலியல் வல்லுறவு
-
▼
Mar
(103)
About Me
- www.mdmkonline.com
- முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.