ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com

Monday, March 2, 2009

ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த விஜயகாந்த் கட்சியின் தொண்டர் மரணம்

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து தீக்குளித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன் இன்று பிற்பகலில் உயிரிழந்தார்.
தமிழ்நாடு வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த வல்லப்பட்டு சிற்றூரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 30).

இலங்கைத் தமிழர்கள் மீது சிங்களப் படையினர் நடத்தி வரும் தாக்குதல்களால் மனவேதனை அடைந்திருந்த சீனிவாசன், அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்ற யாரும் முன்வர மறுக்கிறார்களே என்று கூறி வந்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் 26 ஆம் நாள் இரவு 11:00 மணியளவில், வல்லப்பட்டில் உள்ள தன் வீட்டிற்கு வெளியே வந்த சீனிவாசன், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தீக்குளிக்கப் போவதாக அறிவித்து விட்டு, உடல்மீது மண்ணெண்ணெயை ஊற்றித் தீயிட்டுக் கொண்டார்.

உடல் கருகிய நிலையில் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர மருத்துவம் அளிக்கப்பட்டு வந்தது.

இதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் 27 ஆம் நாள் நள்ளிரவு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, சீனிவாசனைப் பார்த்து ஆறுதல் கூறினார்.

இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்துக் கொளத்தூர் முத்துக்குமார், பள்ளப்பட்டி ரவி, சீர்காழி இரவிச்சந்திரன், கடலூர் தமிழ்வேந்தன், சென்னை அமரேசன், சிவப்பிரகாசம், சிவகாசி கோகுலரத்னம் ஆகியோர் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்துள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து, தீக்குளித்த சீனிவாசனைக் காப்பாற்ற வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் போராடி வந்த நிலையில் இன்று திங்கட்கிழமை பகல் 3:00 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

தீக்குளித்து உயிரிழந்த சீனிவாசன் வல்லப்பட்டு தேசிய முற்போக்கு திராவிடர் கழக கட்சியின் கிளை செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு 7 வயது மகன் உள்ளார்.

இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க தேசிய முற்போக்கு திராவிடர் கழக கட்சியின் தலைவர் விஜயகாந்த் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அதனால் மனமுடைந்து தீக்குளித்ததாகவும் தெரிவித்திருந்தார்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Followers

News Archive

About Me

My photo
முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.