ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com

Tuesday, March 17, 2009

இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த விடுதலை சிறுத்தைகள், பா.ம.க. தொண்டர்கள் மரணம்

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கடலூரில் தீக்குளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டரான ஆனந்த் (23). மற்றும் அரியலூர் மாவட்டம் ராஜசேகர் (வயது 24) ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடலூர் அருகே உள்ள அன்னவள்ளியை சேர்ந்தவர் நாகலிங்கம் மகன் ஆனந்த்(23). விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டரான இவர் இலங்கை தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை மாலை தீக்குளித்தார்.

புதுவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காட்டுநாகலேரியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 24). பா.ம.க.வை சேர்ந்த இவர் இலங்கை தமிழர்களுக்காக ஞாயிற்றுக்கிழமை மாலை தீக்குளித்தார்.

இதையடுத்து அவரை தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் சேர்ந்தனர். சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

முன்னதாக தஞ்சை அரசு மருத்துவமனையில் ராஜசேகர் சிகிக்சை பெற்று வந்த போது ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேரில் சென்று பார்வையிட்டார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Followers

News Archive

About Me

My photo
முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.