ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com

Sunday, March 22, 2009

ஈழத்தமிழருக்காக மேலும் ஒரு தேமுதிக பிரமுகர் தீக்குளித்து மரணம்

ஈழத்தமிழருக்காக மேலும் ஒரு தேமுதிக பிரமுகர் தீக்குளித்து மரணம்

புதுக்கோட்டை மாவட்டம் கொத்த மங்களம் பகவான் தெருவைச் சேர்ந்தவர் பாலசுந்தரம். தேமுதிகவின் கிளைச் செயலாளராக உள்ள 35 வயதான இவர் இன்று மதியம் 12 மணியளவில், தனது வீட்டிற்கு வெளியே ஓடிவந்து மண்ணெண்ணெய்யை தனது மேல் ஊற்றி தீயிட்டுக்கொண்டார்.
சமையல் தொழிலாளியான இவர் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்று எந்தக் கட்சி சார்பில் நடந்தாலும், கட்சி பாகுபாடின்றி கலந்து கொள்வார்.


கீரமங்கலம், கொத்தமங்களம், வடகாடு ஆகிய ஊர்களில் ஈழத்தமிழர்ளின் அவல நிலையை விளக்கும் தட்டிகள் வைக்கப்பட்டிருந்தது. ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அனுமதி பெற்று வைக்கப்பட்டிருந்த இந்த தட்டிகளை காவல்துறையினர் அகற்றினர். இதை தாக்க முடியாத பால சுந்தரம், தனது கட்சிகாரர்களிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக ஈழத்தமிழர்களின் நிலைமை குறித்து தனது குடும்பத்தாரிடமும், கட்சிக்காரர்களிடம் கவலை தெரிவித்து வந்த பாலசுந்தரம், இன்று மதியம் 12 மணி அளவில், தனது வீட்டிற்கு வெளியே ஓடிவந்து மண்ணெண்ணெய்யை தனது மேல் ஊற்றி தீயிட்டுக்கொண்டார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் பாலசுந்தரத்தை காப்பற்ற முயன்றனர். ஆனால் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மரணம் அடைந்த பாலசுந்தரம் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கொத்தமங்களத்தில் வைக்கப்பட்டுள்ளது.


பாலசுந்தரம் உடலுக்கு தமிழின உணர்வாளர்கள், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், அரசியல் கட்சியினர் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பின்னூட்டம் :
தேமுதிக வைச் சேர்ந்த இரண்டாவது நபர் தீக்குளித்து இறந்துள்ளார் . இதை அதன் தலைமை உணரவேண்டும். தேர்தல் கணக்கில் காங்கிரஸ் க்கு சாதகமான் முடிவை அதன் தலைமை எடுக்குமானால் தேமுதிகா வில் உள்ள திராவிட நண்பர்களால் அதை ஜீரணிக்க முடியாது. அவர்கள் அதன் தலைமுக்கும் கட்டுப்பட மாட்டர்கள்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Followers

News Archive

About Me

My photo
முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.