ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com

Monday, March 16, 2009

போர் குற்றங்கள் புரியும் சிங்கள அரசாங்கம் - ஐ நா

எமது அறிக்கை சரியானது: சிறிலங்காவுக்கு ஐ.நா. பதிலடி

போர்க் குற்றங்களை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் கலாநிதி நவநீதம்பிள்ளை தெரிவித்த கருத்துக்கள் சரியானது என ஐ.நா.வின் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகம் தெரிவித்துள்ளது.
நவநீதம்பிள்ளையின் கருத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் சபை அதற்கு பதிலடி கொடுத்துள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தின் பேச்சாளர் றூபெட் கொல்விலி தெரிவித்துள்ளதாவது:


சிறிலங்கா அரசாங்கம் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ள போதும் இலங்கையின் வடபகுதியில் ஏற்பட்டுள்ள நிலமை தொடர்பாக நாம் வெளியிட்ட அறிக்கை சரியானதே.
சிறிலங்கா அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட கொல்லப்பட்ட பொதுமக்கள் தொடர்பான தகவல்களை பலதரப்பு தகவல்களுடன் ஒப்பிட்ட பின்னரே அறிக்கை வெளியிடப்பட்டது.
எனவே கடந்த வெள்ளிக்கிழமை எமது அலுவலகம் வெளியிட்ட தகவல் சரியானது என்றார் அவர்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Followers

News Archive

About Me

My photo
முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.