ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com

Friday, March 20, 2009

விடுதலைப்புலிகள் புதிய வகை ஆயுதங்களால் தாக்குகின்றனர்: படையினர் தெரிவிப்பு

பின்னூட்டம் :
போராளிகளின் உண்மையான நோக்கம் நிறைவேறியே தீரும். ஈழம் நிச்சயம் மலரும். இந்தியா மற்றும் இலங்கை க்கு எதிரான தமிழர் போராட்டம் வெல்லும்.தமிழர்களுக்கு எதிரான கருணாநிதியின் துரோகம் அழிந்தே தீரும்.

முல்லைத்தீவில் படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினர் மீது விடுதலைப்புலிகள் புதிய வகை ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்துவதாக, சிறீலங்கா படைத்தரப்பு கூறுகின்றது.
படை நடவடிக்கையில் ஈடுபட்டு்ள்ள 11ஆம் காலாட் படை இதனால் கடும் இழப்புக்கள சந்தித்துள்ளதாகவும், இவ் ஆயுதங்கள் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு அங்கு கொண்டு செல்லப்பட்டிருக்க வாய்ப்புக்கள் குறைவாகவே இருப்பதால், அவை அனைத்தும் விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்டவையாக அல்லது நவீனப்படுத்தப்பட்டவையாக இருக்கலாம் என்றும் படை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். முன்னர் அனுராதபுரம் விமானப்படைத்த்தளம் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தியபோது அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் பல வெளிநாட்டு படையதிகாரிகளால் கூட அடையாளம் காணமுடியாதவையாக இருந்தன என சிறீலங்கா அரசும் படைகளும் திண்டாடியமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Followers

News Archive

About Me

My photo
முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.