ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com

Thursday, March 26, 2009

தொடரும் திருமாவின் துரோக செயல்கள்

திருமாவின் இந்த அறிக்கை கருணாநிதியின் அறிக்கைக்கு சற்றும் சளைத்ததல்ல.
ஏன் திருமா துரோக கும்பலோடு சேர்ந்து ஈழ மக்களுக்கு இப்படிப்பட்ட துரோகத்தை செய்கிறார் என்று தெரியவில்லை.

அவரது அறிக்கையை இங்கே படியுங்கள் .
அதற்கு முன் அதற்கான பின்நூட்டக்களை படியுங்கள்


பதிவு செய்தவர்: திருமா பதிவு செய்தது: 26 Mar 2009 05:47 pm அன்னை சோனியாஜி வாழ்ககலைஞர் வாழ்கராகுல் வாழ்கபிரியங்கா வாழ்ககனிமொழி வாழ்க நான் வாழ்க

பதிவு செய்தவர்: எஸ் ஜெ ஆர் பதிவு செய்தது: 26 Mar 2009 05:43 pm முன்பெல்லாம் எதிரியாக இருந்த சோன்னியா! இப்போது தோழமையாக மாறிவிட்டார். என்னகொடுமையடா சாமி! அடிக்கிற இடத்தில பல்டி அடிக்கிறாங்கப்பா.தமிழ் வெல்லட்டும்.தமிழ் வாழட்டும்.

பதிவு செய்தவர்: ரஜீவன் பதிவு செய்தது: 26 Mar 2009 05:38 pm திருமா நீங்கள் ஓர் நல்ல நடிகர் என்பதை அடிகடி நிருபிக்கிறீர்கள், கருணாவுக்கு பிறகு எங்கட மக்களுக்கு துரோகம் செய்வதில் நீங்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை நிருபிக்கிரீர்.

பதிவு செய்தவர்: மாரி முத்து பதிவு செய்தது: 26 Mar 2009 05:34 pm திருமாவளன் தனித்து போட்டிஈடு வேண்டும்


பதிவு செய்தவர்: அறிக்கை பதிவு செய்தது: 26 Mar 2009 05:27 pm டேய்!!! இன்னும் எத்தனை naalda என்னை vida poreenga...valikkudhudaa..aludhuduven!!!

பதிவு செய்தவர்: obama பதிவு செய்தது: 26 Mar 2009 05:26 pm thiruma is a stupid mokkai

பதிவு செய்தவர்: தமிழன் பதிவு செய்தது: 26 Mar 2009 05:24 pm ஒஷியட்டும் தமிழ் துரோகிகளின் கூட்டணி.... அழியட்டும் தமிழின விரோத அரசியல்.


போர் நிறுத்தம்-சோனியாவுக்கு திருமா வேண்டுகோள்

சென்னை: இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை உடனடியாக நிறுத்த மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடு்த்துள்ளார்.இது குறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,முல்லைத்தீவில் நடக்கும் இனப்படுகொலை மனித நேயமுள்ள ஒவ்வொருவரையும் மிகப்பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் 9,985 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக ஐநாவின் மனித உரிமை அமைப்பின் ஆவணம் சுட்டிக்காட்டுகிறது.இது தொடர்பாக அண்மையில் டெல்லிக்கு வந்திருந்த ஐநா மனித உரிமை அமைப்பின் செயலாளர் நவநீதம் பிள்ளை இந்த அதிர்ச்சியான உண்மையை வெளியிட்டிருக்கிறார். தொடர்ந்து இந்திய அரசு அமைதி காப்பதும் வேடிக்கை பார்ப்பதும் மனித நேயமுள்ள ஒவ்வொருவரையும் ஆழ்ந்த கவலையடைய செய்துள்ளது.சர்வதேச சமூகத்தையே உலுக்கியிருக்கிற இலங்கை இனவெறியர்கள் நடத்தும் மனிதப் பேரவலம் தொடர்பாக இந்திய அரசு கருத்து ஏதும் கூறாமல், தடுப்பு நட வடிக்கை மேற் கொள்ளாமல் இலங்கை ராணுவத்தை ஊக்கப் படுத்தும் வகையில் நடந்து கொள்வது சகித்துக் கொள்ளவே முடியாததாக உள்ளது.தமிழக மக்களை அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆளாக்கியிருக்கிற இந்த இனப்படுகொலை பொதுத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். எனவே இந்திய அரசோ, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியோ இதில் விரைந்து தலையிட்டு போர் நிறுத்தத்திற்குரிய அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறது என கூறியுள்ளார் திருமாவளவன்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Followers

News Archive

About Me

My photo
முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.