சிறீதுங்க ஜெயசூரிய எச்சரிக்கை :-
இலங்கையில் விரைவில் மாகாணத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே தமிழர்களை அழித்தொழிக்கும் வகையில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஐக்கிய சோசலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சிறீதுங்க ஜெயசூரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்துவதற்காக, சென்னையில் தொடங்கப்பட்டுள்ள இலங்கையில் போரை நிறுத்தி ஜனநாயகத்தை நிலைநாட்ட அணி திரட்டும் குழுவின் கண்டனக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலங்கை ஐக்கிய சோசலிஸ்ட் கட்௦சியின் பொதுச் செயலாளர் சிறீதுங்க ஜெயசூரிய பேசியதாவது: ௦௦௦௦௦ இலங்கையில் நடைபெறும் ஒவ்வொரு தேர்தலிலும் அப்பாவி தமிழர்கள் மீதான தாக்குதல்களை முன்னிறுத்தி தான் ராஜபக்ச வெற்றி பெற்று வருகிறார். இலங்கையில் ஏப்ரல் 25ஆம் தேதி மேல் மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், அதற்கு முன்னதாகவே தமிழர்களுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டுவந்து விடுவதாக இலங்கை மக்களுக்கு ராஜபக்ச உறுதி கொடுத்திருந்தார். ஆனால், விடுதலைப் புலிகளின் பதில் தாக்குதல் காரணமாக அந்த போரை அவரால் சொன்ன தேதியில் முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை. கடைசியாக கடந்த பெப்ரவரி மாதம் 4 ம் தேதிக்குள் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக உறுதியளித்திருந்தார். ஆனால் போர் இன்னமும் நீடித்து வருகிறது. இந்நிலையில், அடுத்த மாதம் மாகாண தேர்தல் நடைபெறவிருப்பதால், அதற்கு முன்னதாக தமிழர்களை முற்றிலும் அழித்தொழிக்கும் வகையில் ஒரு மிகப்பெரிய தாக்குதலை நடத்த அதிபர் ராஜபக்ச திட்டமிட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு காசா பகுதியில் போர் நடந்தது. அமெரிக்க உதவியிடன் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியது, இதுபற்றி சர்வதேச ஊடகங்கள் பக்கம் பக்கமாக செய்திகள் வெளியிட்டன. ஆனால் இன்று நடைபெற்று வரும் இலங்கைத் தமிழர் படுகொலை குறித்து ஊடகங்கள் செய்திகள் வெளியிடுவது இல்லை. காசா தாக்குதலை பொறுத்தவரை, மொத்தமே 2 ஆயிரம் பேர் தான் கொல்லப்பட்டனர். ஆனால், இலங்கையில் கடந்த சில வாரங்களிலேயே 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், இதைப்பற்றி எந்த ஊடகமும் கவலைப்படவில்லை.
இந்த போர் இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் அல்ல, உலகளவில் பல வல்லரசு நாடுகள் கூட அதிபர் ராஜபக்சவின் பின்னால் உள்ளன. இந்த போர் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என ராஜபக்ச கூறுகிறார். ஆனால், இது உண்மையல்ல. இது ஓர் இனத்தையே அழித்து ஒழிக்கும் போர். இந்த போரில் ஏராளமான இலங்கை மக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். இலங்கை தமிழர்களுக்கு எதிரான இந்த போரை ஒட்டுமொத்த இலங்கை மக்களும் ஒன்றிணைந்து நடத்துவதாக ஓர் தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் பெரும்பாலான இலங்கை மக்களே கூட தமிழர்களுக்கு எதிரான இந்த போரை விரும்பவில்லை. பெரும்பாலான மக்கள் அதிபர் ராஜபக்சவுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர்.
ஆனால், இதை யாரும் தைரியமாக வெளியே சொல்ல முடியாது. அப்படி சொன்னால் கொல்லப்படுவார்கள். எனது உயிருக்கே கூட இன்னமும் அச்சுறுத்தல் உள்ளது. ராஜபக்சவுக்கு முன்பு 5 பேர் இலங்கை அதிபர்களாக இருந்துள்ளனர். அவர்கள் அனைவருமே பொதுமக்கள் ஆதரவுடன் பதவிக்கு வந்தவர்கள். ராஜபக்ச மட்டும் தான் பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தவர். அவரை இலங்கையில் உள்ள இடதுசாரி கட்சிகளும் ஆதரிக்கின்றன. இந்த ஆதரவை அவர்கள் விலக்கிக்கொள்ள வேண்டும். தமிழக அரசியல்வாதிகள் இலங்கையில் நடைபெற்று வரும் போர் குறித்து, ஓர் அறிக்கை போரே நடத்தி வருகின்றனர். ஆனால், வெறும் அறிக்கைகளால் மட்டும் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது. அமெரிக்க அதிபர் ஒபாமாவே கூட நாளை அறிக்கை வெளியிடலாம். ஆனாலும் அந்த அறிக்கையால் இலங்கை பிரச்சினையில் எந்த மாற்றமும் ஏற்படாது. தமிழக அரசியல்வாதிகள் தங்களது தேர்தல் பிரச்சாரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையை கையில் எடுக்க வேண்டும். அனைத்துத் தலைவர்களும் ஒன்றிணைந்து, தமிழக மக்களை ஒன்று திரட்டி, வீதியில் இறங்கி ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டும், ஒருநாள் தமிழகத்தின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் நிறுத்திவிட வேண்டும். அப்படி செய்வதன் மூலம் மத்திய அரசை வலியுறுத்தி, சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்து, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வழிவகை செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார். கடந்த முறை நடந்த சிறீலங்கா அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிட்டவர் சிறீதுங்க ஜெயசூரிய என்பது குறிப்பிடத்தக்கது.
ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com
Tuesday, March 31, 2009
Subscribe to:
Post Comments (Atom)
Followers
News Archive
-
▼
09
(129)
-
▼
Mar
(103)
- ஈழத் தமிழர் மீது ராஜபக்ச அரசு மிகப்பெரிய தாக்குதல்...
- இந்தியா நடத்தும் ஈழபோரில் இதுவரை ஐயாயிரம் தமிழ் உய...
- ராமேஸ்வரம் வந்த 14 தமிழ் அகதிகள்
- தனி தமிழீழத்தை ஆதரிப்பவர்களுடன் இலட்சிய தி.மு.க. க...
- தமிழர்கள்பேரில் பிச்சை எடுக்கும் ராஜபக்சேக்கள்.வீர...
- விடுதலைப் புலிகளின் அனைத்துலக பிரதிநிதியுடன் ஹோல்ம...
- ஈழத்தில் இந்தியா நடத்தும் போர்.தேவையில்லாமல் இந்தி...
- குறுக்கு விசாரணைக் கூண்டில் சிபிஎம் - ஈழத் தமிழர்க...
- காங்கிரஸுக்கு மருத்துவர் ராமதாஸ் தந்த மரண அடி: சகே...
- தொடரும் திருமாவின் துரோக செயல்கள்
- விடுதலை சிறுத்தைகளின் துரோகம் - சாயம் வெளுக்கிறது.
- இநதியாவின் காங்கிரஸ் அரசாங்கத்தின் மன்னிக்கமுடியா...
- இலங்கைத் தமிழர்களையும், அவர்களது நலன்களையும் கைகழு...
- 5 ஆயிரம் இந்திய இராணுவத்தினர் கப்பலில் இலங்கை பயணம...
- ஈழத்தமிழருக்காக மேலும் ஒரு தேமுதிக பிரமுகர் தீக்கு...
- சென்னையில் இன்று கண்டன ஆர்பாட்டம்
- தமிழின கொலை பட்டியல்
- விடுதலைப்புலிகள் புதிய வகை ஆயுதங்களால் தாக்குகின்ற...
- கிழக்கில் கைப்பற்றிய பிரதேசங்களில் சிறிலங்கா அரசு ...
- தமிழ்நாட்டின் அரசியல் துரோகிகள் - அடையாளம் காண்பீர...
- உலகில் எங்கும் நடக்காத கொடூரம் தமிழர் தாயகத்தில் ...
- இந்தியாவின் தவறான அணுகுமுறை மற்றும் நடத்தைகள் -அமெ...
- வடபகுதியில் ஏற்பட்டுள்ள நிலை மிகவும் அபாயகரமானது: ...
- தமிழனின் இரத்தத்தை கொதிக்க வைக்கும் அறிக்கை - திம...
- போலிசின் போலித்தனம் - தமிழ் உணர்வாளர்கள் மறியல்
- ராஜபக்ஸ அரசுக்கு மத்திய அரசு ஆயுதம் வழங்கி, ஜனநாயக...
- கருணாநிதியின் அடுத்த துரோக நடவடிக்கை
- இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த விடுதலை சிறுத்தை...
- பிரபாகரனை அழிக்க நினைத்தால் கடும் விளைவு-வைகோ
- கொளத்தூர் மணி , சீமான் , நாஞ்சில் சம்பத் கைதைக்கண்...
- இலங்கை-பாமக-வி.சி. தொண்டர்கள் தீக்குளிப்பு
- பத்திரிக்கையாளர் பயங்கரவாதியானார் - இலங்கை அரசாங்க...
- போர் குற்றங்கள் புரியும் சிங்கள அரசாங்கம் - ஐ நா
- ஈழத்தின் விசயமாக அனைத்து செய்திகளும்
- இலங்கை தமிழர்களுக்காக தமிழகத்தில் வாலிபர் ஒருவர் த...
- மருந்துகள் ஈழத்தமிழர்களுக்காக அனுப்பவில்லை; இலங்கை...
- இலங்கை இராணுவம் பிடித்து வைத்துள்ள இடங்களில் புலிக...
- மீண்டும் செய்திகள் இங்கே !
- வன்னியில் சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குத...
- ஈழ விடுதலைப் போராட்டம் - வட்டமிடும் வல்லூறுகள்
- கச்சத்தீவு செல்ல தடை: மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்
- இந்தியனாக இருக்க வைகோ தகுதியற்றவர்-தங்கபாலு
- சிறிலங்காவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் - வைகோ
- புதுச்சேரி பிரெஞ்சு தூதரகத்தில் வைகோ-நெடுமாறன் மனு
- தூ... மானங்கெட்ட காங்கிரஸ்காரங்களே...
- புதுக்குடியிருப்பு இராணுவம் முற்றுகை வலயம் உடைக்கப...
- போர் நிறுத்தத்தை இந்தியா வலியுறுத்தினால் 100 நாடுக...
- தமிழீழ ஆதரவு பயணம் நிறைவு-சேலத்தில் மாநாடு
- ஈழத் தமிழர்களின் போராட்டத்துக்கு அ.தி.மு.க. அதரவு:...
- தளராது போராளிகளுக்கு ஊக்கம் கொடுப்போம் உறுதியுடன் ...
- வைகோ அறிக்கை
- உணர்ச்சிக் குரல் எழும்பும்வரை இதயம் துடிக்கும்: ஒர...
- தமிழக மக்களை ஏமாற்றி வாக்குகள் பெறவே இலங்கைக்கு இந...
- உலக நாடுகள் கைவிட்ட எங்களை நீங்களாவது காப்பாற்றுங்...
- ஒரே நாளில் உலகத் தமிழர்கள் உண்ணாவிரதம் இருப்பார்களா?
- கலைஞரே ...இனிமேல் நீங்கள் போடுவது எல்லாமே தப்பு...
- இராஜீவ்- கொலை அல்ல, தண்டனை
- இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் அரசு தோற்றுவ...
- புதுக்குடியிருப்பில் நான்கு டிவிசன் சிறிலங்கா படைய...
- இலங்கை தமிழர்களைக் பாதுகாக்க கோரி சென்னையில் 6 பார...
- உள்நாட்டு போரை அனைத்துலகத்தின் கவனத்திற்கு கொண்டு ...
- வன்னியில் நேற்று நடந்த தாக்குதலில் 32 தமிழர்கள் பலி
- சிறிலங்கா அரசின் தமிழினப் படுகொலையின் கோரகாட்சிகள்
- இலங்கையை அதிர வைத்துள்ள பிரபாகரன் மகனும், விகடன் க...
- உலகத் தலைவர்களுக்கான கோரிக்கை படிவங்களில் கையெழுத்...
- இந்தியா பேரினவாதத்தின் ராஜாவா? - டி.அருள் எழிலன்.
- சிறுமி மீது பாலியல் வல்லூறவில் ஈடுபட்டவர் வெல்லாவெ...
- பெண்கள் அனைவரும் படையினருக்கு விருந்தாகட்டும்: ஆண்...
- சிறிலங்கா மேற்கொண்டுள்ள தமிழினப் படுகொலையின் காட...
- பிரபாகரனையும், விடுதலைப்புலிகளையும் பற்றி பாரதியார...
- வன்னியில் ராணுவ வெறி தொடருகிறது - 83 தமிழர்கள் படு...
- Sri Lanka: Ban deplores rising civilian death toll...
- ஈழத்தில் நடப்பது என்ன?’... வைகோ எழுச்சி உரை
- வைகோ உரை இந்திய - இலங்கைத் தமிழ்ச்சங்கங்களின் கூட்...
- 'ஆனந்த விகடன்' வார இதழை விற்பனை செய்த பிரபல புத்தக...
- தனி ஈழம் மட்டுமே சரியான தீர்வு - நாஞ்சில் சம்பத்
- யாரையும் மிரட்டலை-கருணாநிதிக்கு குப்தா பதில்
- Stop Sri Lanka’s bloody civil war:Andrew Dismore MP
- தணலில் தகிக்கும் தமிழகம் - தணிக்கப் பார்க்கும் முத...
- ராஜீவ் கொலையில் சுப்பிரமணியசாமி தொடர்பு - பெரியார்...
- ஈழத்தில் நம் சொந்தங்கள்
- ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தீக்குளித்த விடுதலைச் சி...
- ஈழத்தில் நம் சொந்தங்கள்..
- மருத்துவமனையில் பயங்கர தாக்குதல் - 37 தமிழர்கள் பட...
- கிளிநொச்சியில் மேலும் ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்க...
- இந்தியாவுக்கு தெரியாமல் சீனாவிடம் ஆயுதம் வாங்கும் ...
- மத்தியில் காங்கிரஸ் கூட்டணி தோற்கும்: வைகோ
- தமிழின அழிப்புக்கு அமெரிக்கா துணை போகக்கூடாது: அமெ...
- ஈழத் தமிழர்களை காப்பாற்றுங்கள்: சென்னையில் பிரித்த...
- மட்டக்களப்பில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்...
- பட்டினிக் கொடுமை; மருந்துப் பஞ்சம்: தமிழரை உயிர்ப...
- பூச்சாண்டிக்கு பயப்பட மாட்டேன்- சிறையிலிருந்து பிர...
- Vaiko feels proud of his photos with LTTE chief
- ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த விஜயகாந்த் கட்சியி...
- ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசின் அனைத்து து...
- பிரபாகரன்-வைகோ 'தொடர்பு'!!: 'படம்' காட்டும் இலங்கை...
- வைகோவுக்கு ஜாமீன்-இன்று விடுதலை
- தமிழர்களை வெளியேற்றுவது வரலாற்று தவறு-பா.பா.நடேசன்
- இனத்திற்கொரு நீதி சொல்லும் இறையாண்மை இரா.செந்தில்க...
- மட்டக்களப்பில் தாயின் முன்னே மகள் பாலியல் வல்லுறவு
-
▼
Mar
(103)
About Me
- www.mdmkonline.com
- முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.