ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com

Wednesday, April 1, 2009

சோனியா போரை நிறுத்த கோரிக்கையாம்.

இவர்களின் ஏமாற்று வேலைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது . கருணாநிதிக்கு கடிதம் எழுதினால் இலங்கையில் போர் நின்று விடும் என்பதை எந்த முட்டாளும் நம்ப தயார் இல்லை .

இலங்கையின் இரு அமைச்சர்களே இந்தியாதான் போர் நடத்துகிறது என்று பகிரங்கமாக சொல்கிறார்கள் . இங்கே கருணாநிதி , பிரதமர், சோனியாகாந்தி தமிழனை மென்மேலும் முட்டாள் ஆக்க முயற்சி செய்கிறார்கள்.


இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும்: சோனியா காந்தி

இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்றும், அவ்வாறு போர் நிறுத்தம் உருவாக இந்திய அரசு, இலங்கை அரசுடன் தொடர்புகொண்டு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி கூறி இருக்கிறார்.
தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதமொன்றில், இலங்கையின் போர் பிராந்தியத்தில் சிக்கியுள்ள அப்பாவித் தமிழர்களின் துயரங்கள் இந்தியாவை மிகுந்த கவலைக்கு ஆளாக்கி இருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார்.
இந்நிலையில் அம்மக்களைப் பாதுகாக்கவும் அவர்கள் நலனைப் பேணவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும், முதற்கட்டமாக அங்கே போர்நிறுத்தம் ஏற்படவேண்டும் என்று மேலும் கூறும் சோனியா காந்தி, இந்தியா இலங்கை அரசுடன் தமிழர் பிரச்சினை தொடர்பாக பல்வேறு கருத்துக்களை விவாதித்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Followers

News Archive

About Me

My photo
முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.