ஈழத்தில் அல்லலுறும் மக்களிடமிருந்து தாய்த் தமிழக மக்கள் மற்றும் தலைவர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள் |
எமது அன்பான தமிழக உறவுகள் மற்றும் தலைவர்களே! வாழ்வா சாவா என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நாம் இப்போது எங்களைக் காப்பாற்றுவதற்கான இறுதி ஆயுதமாக உங்கள் உதவியை நாடி நிற்கிறோம். |
குறுகிய பிரதேசத்திற்குள் முடக்கப்பட்டிருக்கும் எமக்கு எதிராக தரைவழியிலிருந்து ஐந்து முனைகளில் இலங்கை ஆக்கிரமிப்பு இராணுவத்தினரும், மக்கள் வாழ்கின்ற கடலோரப் பகுதிக்கு அண்மையில் இருந்து இலங்கை கடற்படையும் இந்தியக் கடற்படையும் கூட்டுச் சேர்ந்து செய்து வருகிற தொடர் தாக்குதல்களால் பெருமளவான மக்கள் செத்துக் கொண்டும் காயமடைந்து கொண்டும் இருக்கிறார்கள். எஞ்சியிருக்கிற உயிர்களைக் காப்பபாற்ற நடவடிக்கை எடுக்குமாறு எமது தொப்புள்கொடி உறவுகளிடமும் மற்றும் தலைவர்களிடமும் அவசர வேண்டுகோள் விடுக்கின்றோம். இப்போராட்டமானது தமிழ்நாட்டையும் இந்தியாவையும் உலுக்கும் வகையிலும் அவசரப் போர்நிறுத்தம் ஏற்படும் வகையிலும் பாரிய ஆர்ப்பாட்டங்கள், இந்திய மத்திய அரச திணைக்களங்களை முற்றுகையிடும் வகையிலும் தமிழ் நாட்டு இளைஞர்களை தட்டி எழுப்பும் வகையிலும் உடனடி பேரணிகள் கதவடைப்பு அல்லது ஒன்றுகூடல்கள் ஏற்பாடு செய்து எம்மைக் காப்பாற்ற அழுத்தம் கொடுக்குமாறு பேரன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் எங்களில் பலரை நாம் இழந்துவிடுவோம். தயவு செய்து தாமதிக்காமல் எமக்காக வீதிக்கு வாருங்கள். எங்கள் உயிர் உங்கள் கைகளில் உறவுகளே! இப்படிக்கு |
ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com
Tuesday, April 7, 2009
இந்தா செய்திதான் வைகோவை எட்டாம் தேதி போராட்டம் செய்ய அழைத்தது
Subscribe to:
Post Comments (Atom)
Followers
News Archive
-
▼
09
(129)
-
▼
Apr
(13)
- பெரும் கொடுமை பேரவலம் - ஆயிரக்கணக்கில் தமிழ் உயிர்...
- கொடுமையிலும் கொடுமை சிங்கள அரக்கர்களின் அட்டகாசம் ...
- வைகோ சரண்டர் பின்னணி… வன்னியிலிருந்து வந்த கட்டளை!
- கபட வேடதாரி கருணாநிதி இங்கே இந்த ஈழ நண்பனின் மடலை ...
- வைகோ மீது வழக்கு பதிவு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக...
- கொத்து கொத்தை வடியும் தமிழர் ரத்த்தங்களும் வீழும் ...
- இலங்கை தமிழர் நலனுக்கு மத்திய அரசே பொறுப்பு : பா.ம...
- தமிழக மக்கள் சரியான முடிவுகளை எடுப்பார்கள். நடேசன்...
- மதிமுக தொண்டனின் கேள்வியும் பதிலும்
- இந்தா செய்திதான் வைகோவை எட்டாம் தேதி போராட்டம் செய...
- இந்தியா கொடுத்த நச்சுவாயு புதுக்குடியிருப்பு மோதல...
- ஈழ துரோகி கருணாநிதி அன்றும் இன்றும்.
- சோனியா போரை நிறுத்த கோரிக்கையாம்.
-
▼
Apr
(13)
About Me
- www.mdmkonline.com
- முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.