இலங்கையில் சிங்களவர்களுக்குச் சமமாகத் தமிழர்கள் அனைத்துத் துறையிலும் சம உரிமையுடன் வாழ வேண்டும். அதற்கு இலங்கையில் சுயநிர்ணய அதிகாரம் (சுயாட்சி) பெற்ற தமிழர் நாடு அமைய வேண்டும். இதற்காக இலங்கைத் தமிழர்கள் நடத்தும் போராட்டத்தை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரிக்கின்றது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று இலங்கைத் தமிழர் ஆதரவு உண்ணாநிலை போராட்ட மேடையில் அறிவித்துள்ளார்.
இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும், அதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறிய, இந்திய அரசையும், திராவிட முன்னேற்றக் கழக அரசையும் கண்டித்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நேற்று திங்கட்கிழமை சென்னை மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாநிலை போராட்டங்கள் நடைபெற்றன.
சென்னையில் நடைபெற்ற உண்ணாநிலை போராட்டத்தில் ஜெயலலிதா கலந்து கொண்டார். உண்ணாநிலை மேடையில் ஜெயலலிதா உரையாற்றினார். அப்போது, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாட்டை விளக்கினார்.
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் என்னுடைய நிலைப்பாடு எல்லோருக்கும் தெரிந்ததுதான். இலங்கைத் தமிழர்கள் அங்குள்ள சிங்களவர்களுக்கு நிகராக நடத்தப்பட வேண்டும். இதற்கான தமிழர்களின் உரிமைக் குரலை நாங்கள் மதிக்கிறோம், அங்கீகரிக்கின்றோம்.
எல்லோரும் சமம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சிங்களவர்களும், தமிழர்களும் சம உரிமையும், சம வாய்ப்பும் பெற்று வாழ வேண்டும் என்ற தமிழர்களின் கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கின்றோம்.
இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணய போராட்டத்தை (சுயாட்சி) நாங்கள் ஆதரிக்கிறோம். அந்நாட்டில் அரசியல் சட்ட அமைப்புக்கு உட்பட்ட வகையில், சுயநிர்ணய அதிகாரம் பெற்ற தமிழர் நாடு அமைய வேண்டும். இதற்காக இலங்கைத் தமிழர்கள் நடத்துகின்ற போராட்டத்தை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரிக்கின்றது.
அதே நேரத்தில் இதற்காக திசை மாறிப்போய் விட்ட ஆயுதம் ஏந்திய போராட்டத்தை நாங்கள் எதிர்க்கின்றோம். இலங்கையில் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சண்டையில் ஒன்றும் அறியாத பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். உணவு, உடை, மருந்து எதுவும் இன்றியும், தங்குவதற்கு கூட இடமின்றியும் அப்பாவித் தமிழர்கள் தவித்துக்கொண்டிருக்கின்றனர். பெண்களும், குழந்தைகளும் தான் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த அவல நிலை பல மாதங்களாக அங்கே நீடித்துக் கொண்டிருக்கிறது. இப்படி துயரத்தில் சிக்கிக் கொண்டிருக்கிற மக்களை காக்க வேண்டும் என்பதிலும், அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதிலும் மத்திய அரசின் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கோ, மாநிலத்தில் ஆட்சி செய்கிறவர்களுக்கோ எள்ளளவாவது அக்கறை இருக்க வேண்டும். ஆனால், இரண்டு அரசுகளுக்குமே அக்கறை இல்லை. அல்லற்படும் படும் தமிழர்களைக் காக்கவும், அவர்களுக்கு உதவவும், நடவடிக்கை எடுப்பதில், இரண்டு அரசுகளுமே தோல்வியடைந்திருக்கின்றன.
இன்று நாம் உண்ணாநிலை போராட்டம் நடத்துவதனால், பசியால் வாடும், மருந்தின்றி வாடும் இலங்கைத் தமிழர்களின் வாயிறு நிரம்பப் போவதில்லை, நோயிலிருந்து அவர்களுக்கு வாழ்வு கிடைக்கப்போவதில்லை. எனினும், இதுவொரு அறப்போராட்டம், நமது கவலையை, நமது கண்டனத்தை தெரிவிக்கின்ற அடையாளம்.
இலங்கையில் நடைபெறும் துயர நிகழ்வுகள் குறித்து, தமிழக மக்கள் மிகவும் கவலையடைந்திருக்கின்றனர் என்பதையும், கடமை தவறிய மத்திய அரசு மற்றும் மாநில அரசு மீது மக்கள் வருத்தமும் கோபமும் அடைந்திருக்கின்றனர் என்பதையும் எடுத்துக்காட்டுகின்ற அடையாளப் போராட்டம் என்று ஜெயலலிதா தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் போரில் ஈடுபட்டுள்ள சிங்களப் படையினருக்கு இந்தியா பல்வேறு வகையில் உதவி வருவதாகக் குற்றம் சாட்டினார். ஆயுத உதவி வழங்குகின்றது, பயிற்சி அளிக்கின்றனர், தொழில்நுட்ப உதவியாளர்கள் அனுப்பபட்டிருக்கின்றனர் எனவெல்லாம் வெளியான செய்திகள் இதுவரை அதிகாரப்பூர்வமான மறுக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டிய ஜெயலலிதா, இந்த மௌனத்தின் மூலம் இந்த செய்திகள் எல்லாம் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன என்றும் தெரிவித்தார்.
மத்திய அரசில் முக்கிய பங்கு வகிக்கும், திராவிட முன்னேற்றக் கழகமோ அதன் முதலமைச்சரோ இத்தகைய உதவிக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை என்று ஜெயலலிதா பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
உண்ணாநிலை போராட்டத்தினை வாழ்த்தி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மருத்துவர் கிருஸ்ணசாமி மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் உரையாற்றினர்.
காலை 9:00 மணி தொடக்கம் மாலை 5:00 மணி வரை உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. ஜெயலலிதாவுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பொதுச் செயலாளர் வைகோ பழரசம் கொடுத்து உண்ணாநிலை போராட்டத்தினை முடித்து வைத்தார்.
ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com
Monday, March 9, 2009
Subscribe to:
Post Comments (Atom)
Followers
News Archive
-
▼
09
(129)
-
▼
Mar
(103)
- ஈழத் தமிழர் மீது ராஜபக்ச அரசு மிகப்பெரிய தாக்குதல்...
- இந்தியா நடத்தும் ஈழபோரில் இதுவரை ஐயாயிரம் தமிழ் உய...
- ராமேஸ்வரம் வந்த 14 தமிழ் அகதிகள்
- தனி தமிழீழத்தை ஆதரிப்பவர்களுடன் இலட்சிய தி.மு.க. க...
- தமிழர்கள்பேரில் பிச்சை எடுக்கும் ராஜபக்சேக்கள்.வீர...
- விடுதலைப் புலிகளின் அனைத்துலக பிரதிநிதியுடன் ஹோல்ம...
- ஈழத்தில் இந்தியா நடத்தும் போர்.தேவையில்லாமல் இந்தி...
- குறுக்கு விசாரணைக் கூண்டில் சிபிஎம் - ஈழத் தமிழர்க...
- காங்கிரஸுக்கு மருத்துவர் ராமதாஸ் தந்த மரண அடி: சகே...
- தொடரும் திருமாவின் துரோக செயல்கள்
- விடுதலை சிறுத்தைகளின் துரோகம் - சாயம் வெளுக்கிறது.
- இநதியாவின் காங்கிரஸ் அரசாங்கத்தின் மன்னிக்கமுடியா...
- இலங்கைத் தமிழர்களையும், அவர்களது நலன்களையும் கைகழு...
- 5 ஆயிரம் இந்திய இராணுவத்தினர் கப்பலில் இலங்கை பயணம...
- ஈழத்தமிழருக்காக மேலும் ஒரு தேமுதிக பிரமுகர் தீக்கு...
- சென்னையில் இன்று கண்டன ஆர்பாட்டம்
- தமிழின கொலை பட்டியல்
- விடுதலைப்புலிகள் புதிய வகை ஆயுதங்களால் தாக்குகின்ற...
- கிழக்கில் கைப்பற்றிய பிரதேசங்களில் சிறிலங்கா அரசு ...
- தமிழ்நாட்டின் அரசியல் துரோகிகள் - அடையாளம் காண்பீர...
- உலகில் எங்கும் நடக்காத கொடூரம் தமிழர் தாயகத்தில் ...
- இந்தியாவின் தவறான அணுகுமுறை மற்றும் நடத்தைகள் -அமெ...
- வடபகுதியில் ஏற்பட்டுள்ள நிலை மிகவும் அபாயகரமானது: ...
- தமிழனின் இரத்தத்தை கொதிக்க வைக்கும் அறிக்கை - திம...
- போலிசின் போலித்தனம் - தமிழ் உணர்வாளர்கள் மறியல்
- ராஜபக்ஸ அரசுக்கு மத்திய அரசு ஆயுதம் வழங்கி, ஜனநாயக...
- கருணாநிதியின் அடுத்த துரோக நடவடிக்கை
- இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த விடுதலை சிறுத்தை...
- பிரபாகரனை அழிக்க நினைத்தால் கடும் விளைவு-வைகோ
- கொளத்தூர் மணி , சீமான் , நாஞ்சில் சம்பத் கைதைக்கண்...
- இலங்கை-பாமக-வி.சி. தொண்டர்கள் தீக்குளிப்பு
- பத்திரிக்கையாளர் பயங்கரவாதியானார் - இலங்கை அரசாங்க...
- போர் குற்றங்கள் புரியும் சிங்கள அரசாங்கம் - ஐ நா
- ஈழத்தின் விசயமாக அனைத்து செய்திகளும்
- இலங்கை தமிழர்களுக்காக தமிழகத்தில் வாலிபர் ஒருவர் த...
- மருந்துகள் ஈழத்தமிழர்களுக்காக அனுப்பவில்லை; இலங்கை...
- இலங்கை இராணுவம் பிடித்து வைத்துள்ள இடங்களில் புலிக...
- மீண்டும் செய்திகள் இங்கே !
- வன்னியில் சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குத...
- ஈழ விடுதலைப் போராட்டம் - வட்டமிடும் வல்லூறுகள்
- கச்சத்தீவு செல்ல தடை: மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்
- இந்தியனாக இருக்க வைகோ தகுதியற்றவர்-தங்கபாலு
- சிறிலங்காவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் - வைகோ
- புதுச்சேரி பிரெஞ்சு தூதரகத்தில் வைகோ-நெடுமாறன் மனு
- தூ... மானங்கெட்ட காங்கிரஸ்காரங்களே...
- புதுக்குடியிருப்பு இராணுவம் முற்றுகை வலயம் உடைக்கப...
- போர் நிறுத்தத்தை இந்தியா வலியுறுத்தினால் 100 நாடுக...
- தமிழீழ ஆதரவு பயணம் நிறைவு-சேலத்தில் மாநாடு
- ஈழத் தமிழர்களின் போராட்டத்துக்கு அ.தி.மு.க. அதரவு:...
- தளராது போராளிகளுக்கு ஊக்கம் கொடுப்போம் உறுதியுடன் ...
- வைகோ அறிக்கை
- உணர்ச்சிக் குரல் எழும்பும்வரை இதயம் துடிக்கும்: ஒர...
- தமிழக மக்களை ஏமாற்றி வாக்குகள் பெறவே இலங்கைக்கு இந...
- உலக நாடுகள் கைவிட்ட எங்களை நீங்களாவது காப்பாற்றுங்...
- ஒரே நாளில் உலகத் தமிழர்கள் உண்ணாவிரதம் இருப்பார்களா?
- கலைஞரே ...இனிமேல் நீங்கள் போடுவது எல்லாமே தப்பு...
- இராஜீவ்- கொலை அல்ல, தண்டனை
- இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் அரசு தோற்றுவ...
- புதுக்குடியிருப்பில் நான்கு டிவிசன் சிறிலங்கா படைய...
- இலங்கை தமிழர்களைக் பாதுகாக்க கோரி சென்னையில் 6 பார...
- உள்நாட்டு போரை அனைத்துலகத்தின் கவனத்திற்கு கொண்டு ...
- வன்னியில் நேற்று நடந்த தாக்குதலில் 32 தமிழர்கள் பலி
- சிறிலங்கா அரசின் தமிழினப் படுகொலையின் கோரகாட்சிகள்
- இலங்கையை அதிர வைத்துள்ள பிரபாகரன் மகனும், விகடன் க...
- உலகத் தலைவர்களுக்கான கோரிக்கை படிவங்களில் கையெழுத்...
- இந்தியா பேரினவாதத்தின் ராஜாவா? - டி.அருள் எழிலன்.
- சிறுமி மீது பாலியல் வல்லூறவில் ஈடுபட்டவர் வெல்லாவெ...
- பெண்கள் அனைவரும் படையினருக்கு விருந்தாகட்டும்: ஆண்...
- சிறிலங்கா மேற்கொண்டுள்ள தமிழினப் படுகொலையின் காட...
- பிரபாகரனையும், விடுதலைப்புலிகளையும் பற்றி பாரதியார...
- வன்னியில் ராணுவ வெறி தொடருகிறது - 83 தமிழர்கள் படு...
- Sri Lanka: Ban deplores rising civilian death toll...
- ஈழத்தில் நடப்பது என்ன?’... வைகோ எழுச்சி உரை
- வைகோ உரை இந்திய - இலங்கைத் தமிழ்ச்சங்கங்களின் கூட்...
- 'ஆனந்த விகடன்' வார இதழை விற்பனை செய்த பிரபல புத்தக...
- தனி ஈழம் மட்டுமே சரியான தீர்வு - நாஞ்சில் சம்பத்
- யாரையும் மிரட்டலை-கருணாநிதிக்கு குப்தா பதில்
- Stop Sri Lanka’s bloody civil war:Andrew Dismore MP
- தணலில் தகிக்கும் தமிழகம் - தணிக்கப் பார்க்கும் முத...
- ராஜீவ் கொலையில் சுப்பிரமணியசாமி தொடர்பு - பெரியார்...
- ஈழத்தில் நம் சொந்தங்கள்
- ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தீக்குளித்த விடுதலைச் சி...
- ஈழத்தில் நம் சொந்தங்கள்..
- மருத்துவமனையில் பயங்கர தாக்குதல் - 37 தமிழர்கள் பட...
- கிளிநொச்சியில் மேலும் ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்க...
- இந்தியாவுக்கு தெரியாமல் சீனாவிடம் ஆயுதம் வாங்கும் ...
- மத்தியில் காங்கிரஸ் கூட்டணி தோற்கும்: வைகோ
- தமிழின அழிப்புக்கு அமெரிக்கா துணை போகக்கூடாது: அமெ...
- ஈழத் தமிழர்களை காப்பாற்றுங்கள்: சென்னையில் பிரித்த...
- மட்டக்களப்பில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்...
- பட்டினிக் கொடுமை; மருந்துப் பஞ்சம்: தமிழரை உயிர்ப...
- பூச்சாண்டிக்கு பயப்பட மாட்டேன்- சிறையிலிருந்து பிர...
- Vaiko feels proud of his photos with LTTE chief
- ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த விஜயகாந்த் கட்சியி...
- ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசின் அனைத்து து...
- பிரபாகரன்-வைகோ 'தொடர்பு'!!: 'படம்' காட்டும் இலங்கை...
- வைகோவுக்கு ஜாமீன்-இன்று விடுதலை
- தமிழர்களை வெளியேற்றுவது வரலாற்று தவறு-பா.பா.நடேசன்
- இனத்திற்கொரு நீதி சொல்லும் இறையாண்மை இரா.செந்தில்க...
- மட்டக்களப்பில் தாயின் முன்னே மகள் பாலியல் வல்லுறவு
-
▼
Mar
(103)
About Me
- www.mdmkonline.com
- முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.