ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com

Friday, March 6, 2009

சிறுமி மீது பாலியல் வல்லூறவில் ஈடுபட்டவர் வெல்லாவெளி காவல்நிலையத்தின் கான்ஸ்டபில்!

சிறுமி மீது பாலியல் வல்லூறவில் ஈடுபட்டவர் வெல்லாவெளி காவல்நிலையத்தின் கான்ஸ்டபில்!


வெல்லாவெளி பகுதியில் சிறுமி மீது பாலியல் வல்லூறவில் ஈடுபட்டவர் வெல்லாவெளி காவல்நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறையைச் சேர்ந்த கான்ஸ்டபில் என நீதிவான் முன்னிலையில் சிறுமியும், தாயாரும் அடையாளம் காட்டினர்.



கடந்த ஞாயிற்றுக்கிழமை 1ம் திகதி வெல்லாவெளி விவேகானந்தாபுரம் கிராமத்தில் அதிகாலை வேளையில் விசேட அதிரடிப்படையினரும், காவல்துறையினரும் இணைந்து சுற்றிளைப்பு தேடுதலில் ஈடுபட்ட போது தாயும், மகளும் இருந்த வீடு ஒன்றுக் சென்று தாயைக் சமையல் அறையில் கட்டி வைத்துவிட்டு மகள் மீது தகாதமுறையில் ஈடுபட்டனர்.


இது தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இது தொடர்பான அடையாள அணிவகுப்பு நேற்று மாவட்ட நீதிமன்றில் பதில் நீதிவான் எம்.ஐ.எம்.நூர்டீன் முன்னிலையில் நடைபெற்ற போது சந்தேக நபரை தாயும், மகளும் அடையாளம் காட்டினர்.



வெல்லாவெளி பொலிஸ்நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபில் டி. என். சனத் நிசாங்க எனத் தெரியவந்தள்ளது. எனினும் 3வது சாட்சியாளரான கிராமவாசி ஒருவர் சந்தேக நபரை அடையாளம் காட்டத்தவறியமையினால் சந்தேக நபரை நீதிமன்ற நீதிவான் வீ.இராமகமலன் முன்னிலையில ஆஜர்ப்படுத்திய போது எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Followers

News Archive

About Me

My photo
முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.