கொழும்பு: பல வருடங்களுக்கு முன்பு திமுக ராஜ்யசபா எம்.பியாக இருந்தபோது, இலங்கை சென்று பிரபாகரனை வைகோ சந்தித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ படங்களை இப்போது வெளியிட்டு, இருவருக்கும் 'தொடர்பு' இருப்பதாக கூறியுள்ளது இலங்கை ராணுவம்.ராஜ்யசபா எம்.பியாக, திமுகவில் வைகோ இருந்தபோது (அப்போது அவரது பெயர் வை.கோபாலசாமி) இலங்கை சென்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சந்தித்தார் வைகோ.
இந்தச் சந்திப்பு குறித்து அப்போதே புகைப்படங்கள் எல்லாம் தமிழக பத்திரிக்கைகளில் வெளிவந்துவிட்டன.
மேலும் இந்த சந்திப்ப வீடியோவும் அப்போதே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.தனது குடும்பத்தினரிடமோ திமுகவில் யாரிடமுமோ தெரிவிக்கால் இலங்கை சென்று வந்தார் வைகோ.இந் நிலையில், வைகோவும், பிரபாகரனும் இருப்பதைப் போன்ற புகைப்படங்களையும், வீடியோ படங்களையும் இலங்கை ராணுவம் வெளியிட்டு, இருவருக்கும் உள்ள 'தொடர்புகள்' உறுதியாகியுள்ளதாகக் கூறியுள்ளது.இந்தப் படங்களில் வைகோவும், பிரபாகரனும் காணப்படுகின்றனர். வைகோ படு இளமையாக இருக்கிறார்.
ஒரு படத்தில் வைகோ விடுதலைப் புலிகளின் சீருடையில், துப்பாக்கியை சுடுவது போல நீட்டி பிரபாகரனுடன் போஸ் கொடுத்துள்ளார்.இந்தப் பழைய படங்களை தற்போது கண்டுபிடித்து எடுத்துள்ள இலங்கை ராணுவம், அவற்றை தனது இணையத் தளத்தில் (http://defence.lk/new.asp?fname=20090301_02) வெளியிட்டு, விடுதலைப் புலிகளுக்கும், வைகோவுக்கும் தொடர்பு இருப்பது உறுதியாகி விட்டதாக கூறியுள்ளது.
இன்னொரு படத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவருடன் பேசுவது போல உள்ளது.
அதேபோல ஜார்ஜ் பெர்னாண்டஸ், வைகோ உள்ளிட்டோருடன் சில புலிகள் அமைப்பினர் இருப்பதைப் போன்ற படமும் உள்ளது. இந்தப் படங்களை எங்கு பிடித்தார்கள் என்ற விவரம் தெரியவில்லை.இலங்கை ராணுவம் கொடுத்துள்ள இந்தப் படங்களை வைத்து வட இந்திய மீடியாக்களும் ஏதோ இப்போது தான் இந்தப் படங்களே வெளியானது மாதிரி செய்திகளை வெளியிட்டுள்ளன.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.